பிந்து கண்ணை திறந்து பார்த்தாள் அதை பார்த்த பிறகுதான் நிலனுக்கு நிம்மதியானது அவன் அமைதியாக நின்றான்.தென்றல் பேச ஆரம்பித்தாள்.
இப்போ உங்களுக்கு பரவாயில்லையா என்று கேட்டாள் தென்றல் பிந்து ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
சரி கொஞ்சம் நேரம் இங்க இருக்கலாம் அப்புறமா போலாம் என்று சொன்னாள் தென்றல் எல்லோரும் சரி என்பது போல தலை அசைத்தார்கள்.
பிந்து எதுவும் பேசவில்லை அவள் அமைதியாக இருந்தாள் நிலன் அவளுக்கு நேராக அமர்ந்திருந்தான்.எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.அப்போது தென்றல் பேச ஆரம்பித்தார்கள்.
என்ன டைரக்டர் சார் ஏதோ சொல்ல வந்துட்டு எதுவுமே சொல்லாம இருக்கீங்க என்று கேட்டாள் தென்றல்.
சில நேரத்துல மனசுல சொல்ல நினைக்கிற விஷயங்கள் வெளிய சொல்ல அவ்வளவு சுலபமான இருக்குறது இல்ல என்றான் நிலன்.
அட என்ன சார் நீங்க சொல்லணும்னு நினைச்சா உடனே சொல்லிடனும் அதுவும் இங்க இருக்குறப்போ ஒரு விஷயம் சொல்லனும்னா உடனே சொல்லணும்.இங்க இருக்குறப்போ நம்ம வாழ்க்கை முடிஞ்சாலும் சரி இல்ல காப்பாத்தபட்டாலும் சரி நம்ம உடனே மறைஞ்சிடுவோம் அதனால திட்டணும்னாலும் சரி இல்ல மன்னிப்பு கேக்கணும்னாலும் சரி உடனே கேட்டுருங்க சரியா என்றாள் தென்றல்.
அவள் சொன்னதை கேட்டு மௌனமாக இருந்த நிலன் பேச ஆரம்பித்தான்.
என்ன மன்னிச்சிடுங்க பிந்து நான் உங்க கிட்ட அப்படி பேசனும்னு நினைக்கவே இல்ல ஆனா தெரியாம அப்படி நடந்துடுச்சு இனி நான் உங்க கிட்ட இப்படி கோப பட மாட்டேன் என்று சொன்னான் நிலன்.அவன் குரலில் பொறுமை அவ்வளவு இருந்தது.ஆனால் அவன் சொன்னதை கேட்ட பிந்துக்குதான் கோபம் கோபமாக வந்தது.
எப்படிங்க உங்களால இப்படி எல்லாம் வெக்கமே இல்லாம மன்னிப்பு கேட்க முடியுது.எல்லா தப்பையும் கேக்க முடியுது .என்ன கொன்னுட்டு நீங்க என்கிட்ட சாரின்னு ஒரு வார்த்தை சொன்னா நான் உங்களை மன்னிச்சுடணுமா.இவங்க எல்லாம் சொன்னங்களே நீங்க பெரிய டைரக்டர்னு அந்த எண்ணத்துலதான் இன்னும் நீங்க இருக்கீங்களா.நீங்க பெரிய ஆள் நாங்க எல்லாம் சின்ன ஆள்தான் அதுக்காக நீங்க மன்னிப்பு கேட்ட உடனே எல்லாம் சரி ஆகிடாது என்று கோபமாக பேசினாள் பிந்து.
YOU ARE READING
உனக்கென்றே உயிர் கொண்டேன்
Romanceஉயிர் உள்ளவரை நேசித்தவருடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். ஆனால் இங்கே கதைக்களமே ஏதேதோ காரணங்களால் வேறு வேறு உயிருக்கு போராடும் சிலர் உலகம் போல இருக்கும் இன்னொரு இடத்துக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது காதல் வந்தால் அவர்கள் எப்படி...