உனக்கென்றே உயிர் கொண்டேன்-1

269 8 16
                                    


அந்த காலை நேரத்தில் மரங்கள் சூழ்ந்த இடத்தில் சூரியனின் கதிர்கள் பரவ ஆரம்பித்தது.
புல் தரையில் படுத்திருந்தவன் மீது அந்த கதிர்கள் பட அவ்வளவு நேரம் இருட்டில் இருந்தவன் கண்களுக்கு வெளிச்சம் பட கண்களை லேசாக திறந்தான்.ஆனால் அந்த வெளிச்சம் அவன் கண்ணுக்கு பழக்க படாததால் மீண்டும் கண்ணை மூடி படுத்தவன் கொஞ்சம் நேரம் கழித்து கண்ணை திறந்து பார்த்தான்.மெல்ல எழுந்து அமர்ந்தவனுக்கு தலை பயங்கரமாக வலித்தது எனவே கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்தவன் கண்ணை திறந்து தலையை இடப்பக்கம் வலப்பக்கம் அசைத்துவிட்டு கொஞ்சம் நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.அவன் மனதில் எந்த விதமான எண்ணமும் தோன்றவில்லை.அவன் மௌனமாக இருந்தான்.அந்த இடத்திலும் சத்தம் வரவே இல்லை அமைதியாக இருந்தது.மௌனமாக இருந்த அவன் காதுக்கு ஏதோ சத்தம் கேட்டது .எனவே அந்த சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க அங்கே நதியொன்று கரைகளை உடைத்து கொண்டு பாய்ந்து சென்று கொண்டிருந்தது.அதை பார்த்தவன் பின்னே செல்ல போக அப்போதுதான் அந்த  பக்கம் ஒரு பெண் வேகமாக நதியை நோக்கி ஓடுவதை பார்த்தான்.அந்த பெண் ஓடுவதும் அந்த நதியின் வேகமும் அவனுக்கு ஏதோ தவறாக இருப்பதை உணர்த்த மிகவும் வேகமாக ஓட ஆரம்பித்தான்.கரைகளை உடைத்து கொண்டு ஓடும் நதிக்கும் அந்த பெண்ணுக்கும் 10 மீட்டர் இடைவெளி இருக்கும்போது அவளை பிடித்துவிட்டான்.அவன் கையை பிடித்ததும் அந்த பெண் திரும்பி கூட பார்க்காமல் அவனுடைய கையை உதறி தள்ள முயற்சி செய்தாள்.ஆனால் அவன் விடுவதாக இல்லை .அவளை பிடித்து இழுக்க அவள் அவன் மீது மோதி நின்றாள்.

வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தாள்.அவள் வேகமாக ஓடி  வந்திருந்தால் அவள் முடி கலைந்து இருந்தது.ஒரே ஒரு பொட்டு கம்மல் அணிந்து இருந்தாள் வேறு எந்த நகையும் இல்லை. அவளை பார்க்கவே அதிகம் பேச மாட்டாள் என்பது போல இருந்தது.இதெல்லாம் அவளை பார்த்த இரண்டு மூன்று நொடியில் அக்னி யோசித்தது.ஆனால் அவள் பேசிய சில நொடியில் அவளை அமைதியான பெண் என்று நினைத்தது  தன்னுடைய தவறு என்ன என்பதை அவன் புரிந்து கொண்டான்,

உனக்கென்றே உயிர் கொண்டேன்Où les histoires vivent. Découvrez maintenant