அனைவரும் வானதி மயக்கம் தெளியும் நேரத்திற்காக காத்திருக்க அவள் இரண்டு மணிநேரத்தில் எழுந்தாள். சரண்யாவும் அமுதா பாட்டியும் அவளிருந்த அறைக்குள் சென்று குழந்தையை முதன்முதலில் அவளிடம் காட்டினர். கண்களில் நீர் மல்க குழந்தையை தூக்கி முத்தமிட்டாள். அவளை இருவரும் அன்புடன் தேற்றிக் கொண்டிருக்கும்போது அறை வாசற்கதவு திறக்கப்பட்டது. வானதி குழந்தையை காண்பதிலேயே லயித்திருக்க இவ்விருவரும் அமைதியாக அறையிலிருந்து வெளியேறினர். கார்த்திக் உள்ளே வந்து கண்ட அந்த காட்சி அவன் உயிர் போகும் வரை மறவான் என நன்கறிந்தான். அவளது சோர்வும் மெலிவும் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.சற்று நேரத்தில் சரண்யாவையும் அமுதா பாட்டியையும் பார்க்க ஏறிட்டவள் கற்சிலையானாள். அவள் அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. குழந்தையிலேயே அவனைக் கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள் அவனையே நேரில் கண்டவுடன் இது ஏதோ மாயை என கண்களை இறுக மூடித் திறந்தாள். அப்போதும் அவன் அமைதியாக கண்களில் சிறு கசிவுடன் அறை கதவருகே நிற்பதைக் கண்டு அதிர்ந்துப் போனாள். அப்படி என்றால் இது நிஜம்தானா.....இது அவனேதானா.....இங்கு எதற்காக வந்தான்? ஒருவேளை என்னை முற்றிலுமாக சாகடிக்க என் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோளான என் குழந்தையை என்னைவிட்டு...என்னைவிட்டு பிரிக்க வந்திருப்பானோ?
சட்டென அவளது கைகளால் குழந்தையை அணைத்துக் கொண்டாள். அவளது அணைப்பின் காரணம் புரிய கண்களை இறுக மூடித் திறந்தவன் மெதுவாக அவள் அருகே வந்தான். அவளது கண்களில் பயத்தினைக் கண்டு தன்னையே நொந்துக் கொண்டவன் முட்டியிட்டு அவளது கைகளை பற்றி முத்தமிட்டு அவளது நெற்றியில் கிடந்த முடியை ஒதுக்கிவிட்டு தனது கைக்குட்டையால் அவளது முகத்தை ஒற்றிவிட்டான். அவள் இன்னும் பயம் அகலாது பார்த்துக் கொண்டிருக்க ஒரு பெருமூச்சு விட்டு அவளை ஒரு உறுதியுடன் ஏறிட்டான். "அன்று நடந்த அத்தனையும் ஒரு பிசகு. எல்லாவற்றையும் நீ நன்கு உடல் தேறியப் பின் பேசிக் கொள்ளலாம். தயவுசெய்து என்மீது... அல்லது அட்லீஸ்ட் என் தாய் மீதாவது நம்பிக்கைக் கொண்டு நமக்கு இனியதொரு எதிர்காலம் பிறக்க என்னை மணந்துக் கொள்வாயா கண்மணி? சற்று யோசித்து வீண் விவாதங்கள் செய்யாமல் நல்ல முடிவை எடுமா. ஆனாலும்...நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் அதற்கு உரிய மதிப்பளிப்பேன்."
YOU ARE READING
Kaadhal Thantha Parisu (காதல் தந்த பரிசு)
Romanceகாதல் தந்த பரிசால் இணையும் பிரிந்துப்போன காதலர்களின் கதை. ❤வானதி-கார்த்திக்❤