🌈என் துரிகா நீயடா🌈
Part ,4
உள்ளே சென்றதும் சாமியின் தரிசனம் முடித்துவிட்டு. பின் ஒரு இரண்டு நிமிடம் உட்கார்ந்தனர். எப்படி இருக்க.. காலேஜ் எல்லாம் எப்படி போகுது என்று கதிர் பேச்சை தொடங்கினாலும் ..ஒரு வார்த்தையில் பதில் பேசி அவள் முடித்து விடவும். தானாக எதுவும் கேட்காதவளாக இருக்கும் முல்லையை அவர் கவனித்தார்.
என்ன மேடம் எதுவும் பேசாம இப்படி அமைதியாகவே இருப்பதா தான் வேண்டிக்க வந்தீங்களோ ...என்று சிரித்துக் கொண்டே 🫢தன் பையில் இருந்து அந்த KitKat 🍫 ஐ எடுத்தார். தனக்கு அதுதான் வேண்டும் என்று முல்லை முன்பே கேட்டிருந்தால்.
Punishment முடிந்தது என்றவரே நீட்டினார்...
அதை அவள் வாங்கிக் கொள்ள...
சரி வரியா ...சாப்பிடலாம் என்றார்
இல்ல வேணாம் என்கிறாள் முல்லை..
ஏன் உனக்குத்தான் ஹோட்டல்ல சாப்பிட பிடிக்கும் ல... யாரும் கூட்டிட்டு போகலன்னு வருத்தப்படுவியே?? வா இன்னைக்கு நான் கூட்டிட்டு போறேன். என்று கதிர் சொல்ல..
முல்லை பதில் ஏதும் சொல்லாமல் இருந்தால்...
கிளம்பலாமா மா... என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் முன் நடந்தார்.
அவளும் பின் தொடர்ந்து செல்ல... இருவரும் கோவிலில் இருந்து வெளியே வந்து சற்று தூரம் நடக்க சரவண பவன் வந்தது.
இருவரும் உள்ளே சென்று ஒரு இடத்தை தேர்வு செய்து உட்கார்ந்தனர்.
உனக்கு ஹோட்டல்ல சாப்பிட பிடிக்கும்னு சொன்னதால எல்லாம் கூட்டிட்டு வரல ..எனக்கு பசிக்குது அதான் வந்தேன் என்றார்🤭
முல்லை அவரை நிமிர்ந்து பார்த்து😏 தன் முகத்தை சுளித்துக்கொள்ள கதிர் சிரித்துக் கொண்டார்..
தனக்கு மீல்ஸ் ஆர்டர் செய்து... உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க தானும் அதையே ஆர்டர் செய்தால். இரண்டு நிமிடத்தில் கொண்டு வந்தனர்
YOU ARE READING
🌈என் தூரிகா நீயடா 🌈
Short StoryDescrition படிச்சா defnition கிடைக்காது so stry உள்ள வந்து வாசித்து நேசியுங்கள் 💞