🌈என் தூரிகா நீயடா 🌈
part 8...
இதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த முல்லைக்கு.. இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது. தன் அண்ணன் அங்கே அவளை திட்ட தொடங்கியிருந்தார். முல்லையின் கண்களும் நீரை விடுவித்தது ,என்னடி Frnd nu நேத்து பூரா சொல்லிட்டு இருந்த இப்ப என்ன சொல்ற ...என்ற தன் அண்ணனின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத முல்லை. ..அழுது மட்டுமே கொண்டிருக்க
வெளியே.. முல்லையின் அப்பா உங்கள Frnd nu மட்டும் தான் சொல்லி இருந்தா தம்பி, என்ற கேள்வியை கதிரிடம் வைக்க.
பயத்தினால இருக்கும் என்றார்...
அவர் சிரிக்க.. பயந்துட்டு இருந்தா என்ன பண்றது, இவர் கூடத்தான் வாழணும்னு தைரியமா சொன்னா தானே ஆகும் என்றார்.
பிரண்டுனு ஒரு பையன அறிமுகப்படுத்தவே அவ்ளோ பயத்தோட வளர்த்து இருக்கீங்க ...எப்படி சொல்லுவா? அதுவும் இல்லாம இது வெறும் பிரண்ட்ஷிப் இல்லன்னு, நாங்களே இப்பதானே புரிஞ்சுகிட்டோம் என்றார்
அப்போ நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறிங்க அப்படித்தானே என்றதும்.
ஒருத்தர் கூட ஒருத்தர் இருந்தா ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்போம்னு நம்புறோம் .அதனால கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறோம் என்றார் தெளிவாக
அப்போ அதையே என் பொண்ணும் சொல்லனும் இல்ல.. அவ சொல்லுவாளா என்றார்..
கண்டிப்பா சொல்லுவா என்றார் கதிர்.
முல்லை..... என்ற தன் அப்பாவின் குரல் தன் காதில் விழ அழுத முகத்தை துடைத்துக்கொண்டு செல்ல முற்பட
இங்க பாருங்க முல்ல... எதையாவது உளறி எங்க மரியாதையை கெடுத்துராத... நேத்து சொன்னது ஞாபகம் இருக்குல்ல.. என தன் அண்ணனின் பேச்சும் காதில் விழுந்து கொண்டே இருக்க, அவர்களை நோக்கி நடந்தால்
அங்கு சென்று முல்லை நிற்க.
கதிர் அவளை நிமிர்ந்து பார்த்தார். நன்கு அழுத்திருக்கிறாள் என தெரிந்தது பயப்படுகிறாள் என்றும் தெரிந்தது. தன்னிடம் நன்றாக பேசும் அவள் அப்பா அவளிடத்தில் அப்படி இல்லை என்ற உண்மையும் கதிருக்கு புரியாமல் இல்லை.. தன்மையாக இருந்திருந்தால் இவள் ஏன் அப்படி பயந்திருக்க போரால் என்பதும் புரிந்தது கதிருக்கு
ŞİMDİ OKUDUĞUN
🌈என் தூரிகா நீயடா 🌈
Kısa HikayeDescrition படிச்சா defnition கிடைக்காது so stry உள்ள வந்து வாசித்து நேசியுங்கள் 💞