ஷிவாணி pov:
அவரு எனக்கு இல்ல வேற ஒரு பொன்னுக்கு சொந்தமாய்ட்டன்னு தெரிஞ்சதும் செத்துட்டேன்....என்னால அவர மறக்க முடியல அதான் எல்லாரையும் விட்டுட்டு லண்டன் கிளம்பிட்டேன்.....அதுக்கப்புறம் இப்பதான் மூனு வர்ஷம் கழிச்சு இந்தியா திரும்பி போரேன்....
மூனு வர்ஷம் கழிச்சு அவர பாக்க போறேன்.....என் ஃபேமிலிய மீட் பண்ண போறேன்....
இன்னும் அரைமணி நேரத்துல ஃப்ளைட் சென்னையில லேண்டாகிடும்.....இதுக்கப்புறம் நான் என்ன பண்ணனும் முடிவு பண்ணிட்டேன்.....
அரைமணி நேரம் போனதே தெரியல....ஃப்ளைட் சென்னையில லேண்ட் ஆகிடுச்சு....வெளில அப்பாவும் அம்மாவும் எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க....நான் சிரிச்சிட்டே ஓடிப்போய் ரெண்டு பேரையும் இருக்கமா கட்டிப்புடிச்சிக்கிட்டேன்....
அப்புறம் மூனு பேரும் வீட்டுக்கு கிளம்பிட்டோம்...காருல போய்ட்டு இருக்கும்போதே அம்மா என் கைய புடிச்சிட்டு
அழுக ஆரம்பிச்சுட்டாங்க...."மா ஆரம்பிச்சுட்டியா.....ஏன் மா இப்புடி அழுமூஞ்சியா இருக்குற....."
"பேசாத டி உனக்கு என்ன.... பெத்தவ எனக்குத்தான் அந்த வலி தெரியும்....மூனு வர்ஷமா நீ போய் லண்டன்ல இருந்துக்கிட்ட....எனக்கு நீ ஒரே பொண்ணு எவ்வளோ மிஸ் பண்ணுனேன் தெரியுமா...."
"மா திஸ் இஸ் டூ மச்....நானா உங்கள இன்னொரு குழந்தை பெத்துக்க வேண்டாம்னு சொன்னேன்.....இன்ஃபேக்ட் நான் உங்கக்கிட்ட எனக்கு குட்டியா தம்பி பாப்பா வேணும்னு கேட்டேனா இல்லையா....பெத்துக்காதது உங்க தப்பு....."
"பாருங்க எப்புடி பேசுறான்னு....."னு அம்மா அழுதுட்டே அப்பாக்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க....
"ஷிவாணி.....வந்த உடனே அம்மாவ அழவைக்காத....."னு அப்பா சொன்னாரு
"ஓ பொண்டாட்டிக்கு சப்போட்டா......"னு சொன்னேன்
"ஷிவாணி....."னு அப்பா மொறச்சிட்டே சொன்னாரு
YOU ARE READING
எனதுயிரே ❤️❤️ ❤️
Romanceஇது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க...