சுகு pov:நான் ஃபோட்டோ ஷுட் முடிஞ்சதும் ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு கிளம்பலாம்னு போனேன்....அப்போ ரிசெப்ஷன்ல ஷிவாணி மேக்னா கிட்ட ஏதோ பேசிட்டு இருந்தா நான் பக்கத்துல போகவும் ரெண்டு பேருமே பேசுறதை நிறுத்திட்டாங்க....நம்ம போனதும் ஏன் இவங்க பேசுறதை நிறுத்திட்டாங்க.....அப்புடி என்ன பேசிருப்பாங்கன்னு யோசிச்சிட்டே போனேன்....
"ஷிவாணி இன்னும் நீ கிளம்பலையா...."
"இல்ல சார் கார் இன்னும் வரல....அதான் நான் வெய்ட் பண்ணிட்டு இருக்குறேன்...."னு சொன்னா
என்னைய அவ சார்னு சொன்னது எனக்கு புடிக்கல....ஆனா நான் சொன்னா கேட்கவா போறான்னு நான் எதுவும் சொல்லல....
அவ கார் வரலன்னு சொன்னா....என்கூட வா நான் ட்ராப் பண்ணுறேன்னு சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டா...."சரி நான் வீட்டுக்கு தான் போறேன் என்கூட வா....மாம் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததும் உன்னைய பாக்கனும்னு சொல்லிட்டே இருக்குறாங்க....வீட்டுக்கு வந்துட்டு போ...நான் அத்தைக்கு ஃபோன் பண்ணிடுறேன்...."னு சொன்னேன்...
"இல்லை தேங்க்ஸ் நான் இன்னொரு நாள் வந்து பாத்துக்குறேன்....இன்னைக்கு நான் கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ் கூட வெளில போறேன்...."னு சொல்லிட்டு இருக்கும்போதே அவ கார் வந்துடுச்சு....
"கார் வந்துடுச்சு....மேக்னா மறந்துடாத....இன்னைக்கு எட்டு மணிக்கு ரெடியா இரு....நான் வந்து உன்னைய பிக் அப் பண்ணிக்குறேன்...."னு சிரிச்சிட்டே சொன்னா....மேக்னாவும் சிரிச்சிட்டே சரின்னு சொன்னா...
அதுக்கப்புறம் அவ என்னைய திரும்பி கூட பாக்காம கிளம்பி போய்ட்டா....
நான் இதை எதிர்பாத்தது தான்....அவ கோவம் ஞாயமானுதான் ஏன்னா நான் அவள அந்த அளவுக்கு காயப்படுத்திருக்குறேன்னு நான் அமைதியா அவ போறதையே பாத்துட்டு இருந்தேன்....
"எக்ஸ்க்யூஸ் மீ சார்...."னு மேக்னா என்னைய கூப்டா...
"சொல்லுங்க மேக்னா...."
YOU ARE READING
எனதுயிரே ❤️❤️ ❤️
Romanceஇது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க...