அந்த பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் பகுதியில் வேதாவும் தர்ஷூவும் சாக்லேட்களை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது விக்ரமின் பழைய நண்பர் ஒருவர் விக்ரமைப் பார்த்து விட்டு பேச வந்தார் அவரிடம் பேசிக்கொண்டே விக்ரம் எதேச்சையாக திரும்ப
அங்கே தர்ஷினி "வேதா நிதைய சாக்லேட் எடுத்தாச்சு போதும்"என்று கூறினாள்
அதற்கு வேதா "உனக்கு என்ன வந்தது நான் சாப்பிடுவேன் இன்னும் நிறைய எடுக்கணும் உனக்கு வேணாம்னா போ" என்று கூறினாள்
இவர்கள் இருவரின் வாக்குவாதத்தை ரசனையாக அவன் பார்த்துக்கொண்டிருந்தான் அவர்களின் பேச்சிலிருந்தே இருவருக்குள்ளும் இருக்கும் ஆழ்ந்த அன்பை உணர்ந்தான்
ஆனால் அவன் நண்பரோ தன் பேச்சை தான் ரசனையாக
கேட்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவர் இன்னும் சொற்பொழிவை ஆற்று ஆற்று என்று ஆற்ற ஆரம்பித்து விட்டார்"ஏய் அங்க பாரு தர்ஷு குட்டி சின் சான் மாதிரி புது டைப் சாக்லேட் இருக்கு பாரு" என்று அந்த Row கடைசியில் இருந்த சாக்லெட்டை வேதா எடுக்கப் போக
அதற்கு முன்னாடியே தர்ஷினி பாதி தூரம் ஓடி போய் நின்று கொண்டு "வேதா யாரு first எதுக்குறாங்களோ அவங்களுக்கு தான் அந்த சாக்லேத்" என்றாள்
ஏன் என்றால் ஒரே ஒரு பீஸ் மட்டும் தான் அதில் இருந்தது திடீரென்று விடப்பட்ட சவாலால் ஒரு நொடி தயங்கிய வேதா சுதாரித்து வேகமாக ஓட முயற்சிக்க அவள் முயற்சியை புரிந்து கொள்ளாத அந்த டைல்ஸ் அவள் காலை வழுக்கிவிட்டது
YOU ARE READING
விக்ரமின் வேதா 💖
Romanceஇரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖