12 நீ... நான்...

2.5K 114 94
                                    

அந்த பரந்து விரிந்திருந்த மொத்த அரண்மனையும் நடுங்கி அடங்கியது ஆதித்தின் அத்துனை கடுங்கோபமான அலரலில்.... ஆதித் ஒன்றும் மகா சக்தி படைத்த ஹீரோவெல்லாம் இல்லை தான்.... ஆனால் அவன் கோவத்தை அடக்க... அப்படிப்பட்ட ஒரு மகாசக்தி படைத்த ஹீரோ பிறந்து வந்தாலும் முடியாத காரியமே....

எத்துனை கோவமிருப்பின் அவன் வீட்டை விட்டு செல்லவில்லை என அனைவரும் நிம்மதியடைய.... மெல்ல நிலையடைந்த அன்னப்பூரனி வெளிரி போன முகத்துடன்....

அன்னப்பூரனி : நீ சொல்லிட்டா நா உன் அம்மா இல்லன்னு ஆய்டுமா.... என்ன தா சொன்னாலூம் உன்ன பெத்து வளத்தவ நான் தான.... என கண்ணீருடன் கத்த...

அம்ருதா : அக்கா அழுகாதீங்க... அவன் கோவத்துல பேச்சீட்டு போறான்....

அன்னப்பூரனி : நீ பேசாத டி... எல்லாம் உன்னால தான்... எல்லாமே உன்னல தான்...

அம்ருதா : நா என்னக்கா பன்னேன்...

அன்ப்பூரனி : நீ ஏன் டி அவன அழச்சிட்டு போன.... என் மகன மந்திரம் போடு மயக்குனது நீ தான்... உன்னல நா இன்னைக்கு தனி மரமா நிக்கிறேன் டி... கட்டுன புருஷனும் மேல போய்ட்டாரு... மெத்த புள்ளயும் மதிக்காம ரோட்ல போற எவளோ ஒருத்தி நீ உன்ன அம்மான்னு சொல்றான் என கத்த...

அவ்ளவு தான்.... கத்தி மட்டுமே சென்ற ஆதித் கோவத்தை அடக்க இயலாது மாடியிலிருந்து விருவிருவென இறங்கி வந்து....

ஆதித் : எவ்வளவு தைரியம் இருந்துர்ந்தா என் அம்மாவ ரோட்ல போற ஒருத்தின்னு சொல்லுவ.... அவங்க என் அம்மா... என் குடும்பத்த பேசுறதுக்கு முன்னாடி என்ன கடந்துட்டு பேசு.... என அடிக்க கோவத்தில் அதிவேகத்தில் கை ஓங்கியவனின் கரம் அம்ருதாவின் " ஆதி "என்ற அலரலில் காற்றிலே நின்றது...

பயத்தில் வெளவெளத்து போன அன்னம் வலிப்பு வராத குறையாய் அவரை அடிக்க ஓங்கிய அந்த பலமான கையை பார்த்து கொண்டிருந்தர்.... அவர் மனம் வேறு... " இந்த கையால அடி வாங்கி இருந்தா ஸ்பாட் அவ்ட் தான்... அப்ரம் கருமாதி வக்க கூட எவனும் இருக்க மாட்டான் " என கூறியது...

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora