நான் போகிறேன்
இனிமேல் என்னைத் தேடாதீர்கள்..நான்
ஆணவத்தின் அடிவருடி
அகங்காரத்தின் அஸ்திவாரம்நான் தனியன்
என்னை
தற்பெருமை தான் ஆக்கிரமிக்கிறதுநான்
சுயநலத்தை வளர்க்கிறேன்
துரோகத்தை விதைக்கிறேன்
அன்பையும் பண்பையும்
அடியோடு அழிக்கிறேன்
ஈவிரக்கமற்ற வெறியர்களை
ஈன்றெடுக்கிறேன்நான் மற்றவரோடே
என்னையும் அழிக்கிறேன்..நான் போகிறேன்
என்னைத் தேடாதீர்கள்நான் என்றவன் இல்லாதிருந்தால்
நாம் என்பது நிலைத்திருக்கும்
சுயநலங்கள் மறைந்திருக்கும்
அன்பும் பண்பும் நிறைந்திருக்கும்
அகிலமெல்லாம் செழிந்திருக்கும்நான் கொடியவனாயிருந்தும்
ஏன் நீங்கள்
இன்னும் என்னை விரட்டவில்லை..??நானே போகிறேன்
இனிமேல் என்னைத் தேடாதீர்கள்...இப்படிக்கு
நான்****
YOU ARE READING
என் பாதை என் நியதி
Thơ caமனதில் கவிதைகளாய் பிரவாகித்த எண்ணங்களின் தொகுப்பே இது. ஒரு மனிதனாய் எனக்குள் எழுந்த எண்ணங்களை கவிதைகளாய் கிறுக்கி வைத்திருக்கிறேன்.