பிழைகளை மறைக்க
பிதற்றுவதை நீ
நிறுத்திவிடுநீ
பிழைப்பதற்காய் பிறரைப்
பிழைகாண்பதையும்
நிறுத்திவிடுஉன் பிழையில்
நியாயம் தேட
நினைப்பதை நீ
நிறுத்திவிடுஎடுத்ததற்கெல்லாம்
அடுத்தவனை
விரல் நீட்டுவதையும்
நிறுத்திவிடுஇயலாமையிலிருப்பவனிடம்
உன்னியலுமையைக் காட்டிட நினைப்பதை
நீ நிறுத்திவிடுநம்பியவனை
நட்டாற்றில் விடும்
பழக்கத்தையும்
நிறுத்திவிடுஎதிரியைக்கூட
முதுகில் குத்தநினைக்கும்
குணத்தை நீ
நிறுத்திவிடுஆணவம் கொண்டு
ஆடுவதை நீ
நிறுத்திவிடுஅடுத்தவன்
அம்மணம் தேடி
வாழ்வதையும்
நிறுத்திவிடுஇழிவாய் ஒருவனை
பார்ப்பதை நீ
நிறுத்திவிடுஉயர்வென
உன்னை
நினைப்பதையும்
நிறுத்திவிடுஓ..!! நண்பனே..
உன்னனைத்து
செயல்களின் பின்னும் -- காற்புள்ளியிட்டு
தொடர நினைக்காதே
முற்றுப்புள்ளியிட்டு
முடிக்கவும் நினைக்காதேநறுமணத்தையும்
துர்நாற்றத்தையும்
பிரித்தறியும்
புத்தியைக் கொண்டவன் நீபகுத்தறிவுடன் - உன்
பயணத்தில்
தொடர்ந்து செல்- தகுந்த இடங்களில்
காற்புள்ளிகளையும்
முற்றுப்புள்ளிகளையும்
வைத்துக்கொண்டுபகுத்தறிவுடன் - உன்
பயணத்தில்
தொடர்ந்து செல்இறுதியில்...
இந்த உலகம்
உன்னைப் போற்றாவிடினும்
ஒரு உள்ளமேனும்
உனைப்போற்றும்அன்பனே...
அன்று நீ காண்பாய்
இந்த வாழ்க்கையின்
உண்மை வெற்றியைஅதுவரை...
உனையாழ நினைக்கும்
அரக்க குணத்தை
முற்றுப்புள்ளியிட்டு நீ
நிறுத்திவிடு****
YOU ARE READING
என் பாதை என் நியதி
Thơ caமனதில் கவிதைகளாய் பிரவாகித்த எண்ணங்களின் தொகுப்பே இது. ஒரு மனிதனாய் எனக்குள் எழுந்த எண்ணங்களை கவிதைகளாய் கிறுக்கி வைத்திருக்கிறேன்.