முகத்தில் முக்காடு
அழகை மறைக்க அல்ல
அசிங்கத்தை மறைக்கஅவுசாரி வாழ்க்கை
ஆடவன் பசி தீர்த்து
வயிற்றுப்பசி போக்கிறாள்வேசி என்னும்
தூசி படிந்த முகத்தை
இன்னும் ஏனோ
மறைத்திடக் காரணம்..???மானம் மறைக்கத் தூண்டுகிறதோ...
மானங்கெட்ட வாழ்விலும்
மானம் காக்க முனைகிறாள்
இருந்தும் என்ன பயன்...பசி தீர்க்கப் படுத்தவள்-எத்தனை
பாவத்தைச் சுமந்திருப்பாள்
பரிதாபம் பார்க்கவும் முடியவில்லை
அவள் பண்ணியதும் ஒரு போதும்
ஞாயமில்லையே...பட்டணியாய் இருந்தாலும்-இங்கணம்
பசி தீர்த்தல் ஆகுமா
ஒரு கணம் அவள் நினைத்திருந்தால்
இன்று
அவள் முகத்தை மறைக்க
இந்த முக்காடு தேவையில்லை****
YOU ARE READING
என் பாதை என் நியதி
Poésieமனதில் கவிதைகளாய் பிரவாகித்த எண்ணங்களின் தொகுப்பே இது. ஒரு மனிதனாய் எனக்குள் எழுந்த எண்ணங்களை கவிதைகளாய் கிறுக்கி வைத்திருக்கிறேன்.