முகத்தில் எந்த பாவமும் இன்றி கிருஷையே பார்த்தவள், "உஃப்... மாமா! இவ்வளவு நேரமாக அது ரிலேட்டடாக தான் பேசிக் கொண்டிருந்தேன். சரி விடுங்கள் மீண்டும் அதைப்பற்றி பேசி குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், நம் வீட்டிற்கு புதிதாக ஒரு ஸ்பெஷல் நபர் வரப் போகிறார்!" என்றாள் வெட்கப் புன்னகையோடு.
குழப்பத்தோடு அவளை கூர்ந்தவன், "அப்படியா யார்?" என கேட்டான்.
"ஆங்... உங்கள் பாட்டியும், என் பாட்டியும்!" என வெடுக்கென்று சொன்னாள் சுஹா.
அவளையே பாவமாகப் பார்த்தான் கிருஷ்.
"இந்த அமுல் பேபி லுக்கெல்லாம் என்னிடம் வேண்டாம். இங்கே பார் மாமா... இது தான் உனக்கு கடைசி வாய்ப்பு. இதிலும் உன்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றால், நீ மாக்கான் என்பதை நீயே ஒத்துக்கொள்ள வேண்டும்!" என சுட்டு விரல் நீட்டி எச்சரித்தாள்.
ஒரு கணம் திருதிருவென்று விழித்தவன், சரியென்று சம்மதமாக தலையசைத்தான்.
'கூல் சுஹா... நீயும் டென்ஷனாகி அவனையும் படுத்தாதே, இது மகிழ்ச்சியான விஷயம். அவனும் தெரிந்து ஆனந்தப்படும் அளவுக்கு நிதானமாக சொல்!' என்று தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.
அவன் விழிகளை நேராக பார்த்தவள், "வரப்போகும் நபர் வெளியூரிலிருந்தோ, வேறு வீட்டிலிருந்தோ வரவில்லை... இன்னும் ஒன்பது மாதத்தில் என் வயிற்றிலிருந்து வரப்போகிறார்!" என்று அவன் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள்.
மெல்ல விஷயம் அவன் மண்டை ஓட்டை தாண்டி உள்ளே இறங்கி அவனை சிலிர்க்க செய்தது, முகமெல்லாம் விகசிக்க அவளை ஆவலாகப் பார்த்தான் கிருஷ்.
"நிஜமாகவா?" என்று குரல் கரகரக்க வினவினான்.
கனிவுடன் அவனை நோக்கி தன் இரு கரங்களையும் நீட்டினாள் சுஹா. அவன் அதற்குள் தஞ்சம் புக, தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டு நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.
YOU ARE READING
தீயுமில்லை... புகையுமில்லை...
General Fictionபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம்...