💟34💟

3.7K 176 181
                                    

வேறு வழியில்லாத சுவாஹனா மெதுவாக எழுந்து நின்றாள், 'தூங்குவதைப் பார்... வளர்ந்துக் கெட்டவன், கட்டில் நீளத்துக்கு படுத்துக் கொண்டால் தாண்டி செல்வதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது?' என சிணுங்கினாள்.

மெல்ல கட்டில் அதிராமல் சாய்கிருஷை தாண்டுவதற்காக காலை உயர்த்தினாள் சுஹா, அந்தோ பரிதாபம்... அந்நேரம் பார்த்தா அவன் புரண்டு படுக்க வேண்டும்? திடீரென்று அவன் அசையவும் எதிர்பாராது தடுமாறியவள் அவன் மீதே பொத்தென்று பூப்பந்தாக விழுந்தாள்.

ஆனால் அவனுக்கு பூப்பந்தாக தெரியவில்லை போலும்? காலில் பெரிய பாறாங்கல்லே விழுந்த மாதிரி ஆவென்று அலறி நடுநிசியில் ஊரை கூட்ட முயன்றான் கிருஷ்.

அதிர்ந்தவள் வேகமாக அவன் மீதே நீந்தி முன்னேறி அவனுடைய வாயை பொத்தினாள்.

"உஷ்... உஷ்... ப்ளீஸ்... ப்ளீஸ்... கத்தாதீர்கள்!" என்றாள் சுஹா, பாட்டி எழுந்து வந்து விடுவார்களோ என்ற பதட்டத்துடன்.

"ஆ... அம்மா... எதற்குடி இப்படி நடுராத்தியில் என் காலை போட்டு உடைத்தாய்?" என்று காலை பிடித்தபடி ஒரேடியாக முனகினான் கிருஷ்.

"ஐயோ இல்லை... ரெஸ்ட் ரூம் போகலாம் என்று எழுந்தேன். தாண்டும் பொழுது நீங்கள் திரும்பி படுக்கவும் தெரியாமல் தடுமாறி விழுந்து விட்டேன்!" என்றாள் பப்பி ஃபேஸை முகத்தில் கொண்டு வந்து.

"நீ தெரியாமல் எல்லாம் விழுந்திருக்க மாட்டாய், இரவு உனக்கு இந்த ஓரம் படுக்க இடம் கொடுக்கவில்லை என வேண்டுமென்றே எகிறி குதித்து என் காலை உடைக்கப் பார்த்திருப்பாய்!" என்று முறைத்தான்.

"ஆங்... அந்த பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது, நீங்கள் தான் அது போலெல்லாம் எகிறி குதிப்பீர்கள். உங்கள் கால் உடையும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு வெயிட்டாகவா இருக்கின்றேன்?" என பாவமாக வினவினாள் சுஹா.

அப்பொழுது தான் பெரும் பூக்குவியல் என அவள் தன் மீது முழுதாக விழுந்து படர்ந்து கிடப்பதை உணர்ந்தான் அவன்.

தீயுமில்லை... புகையுமில்லை...Où les histoires vivent. Découvrez maintenant