பகுதி-03

1.9K 84 21
                                    


ராகவ் அவனது கண்களை உருட்டி உருட்டி தேடிக்கொண்டு இருந்தான்.

சித்ராவும் அவனது கையை பிடித்துக்கொண்டு நின்றாள்....

மாப்பிள்ளை மணமேடைக்கு வந்து அமர்ந்து விட்டான்....  மந்திரமும் ஆரம்பிக்க போகின்றது.... மெதுவாக கீழ் இறங்கி வந்த ஒரு நண்பி ராகவ் க்கு அருகில் நின்றாள் முகத்தை தன் லெஹங்கா  ஷோல் மூலம் மறைத்தும் இருந்தாள்.....

அதன் பின்பு அடுத்தவள் பதற்றத்துடன் வந்தாள்.... அவள் பதற்றமாக இருப்பதையும் மாடியிலிருந்து வருவதையும் ராகவ் கவனித்தான்.

அவள் பதற்றமாக இருப்பதை கண்ட  உடனே சித்துவை நோக்கி "சித்து மா அங்க ஒரு பொண்ணு பதற்றமா வருதுல்ல அவ மேல ஒரு கண்ண வெச்சிக்கோ" என்றான்  சித்து தலையை ஆட்டினாள்

அந்த பெண் எல்லோருடனும் பதற்றமாக பேசிக்கொண்டு
இருப்பதையும் கவனித்தனர்

ராகவ்க்கு பக்கத்தில் உள்ள நண்பியின் அருகில் வந்ததும் "அக்கா டி ஸீ பி  ராகவ் சேர் பார்த்தீங்களா?". என்று கேட்டாள்

அந்த நண்பி "ஏன் மா அவர தேடுற" என்று கேட்டாள்

உடனே இவள் "நம்ம ரக்ஷு ஏதோ ப்ராப்ளத்துல இருக்கா கொஞ்சம் வர சொல்லுங்க நான் அவர பார்த்ததில்லை" என்று விட்டு ஓட போனவளை  இழுத்து நிறுத்தி "என்ன விஷயம் நான் தான் ராகவ்" என்றதும்

"சார் நம்ம ரக்ஷு ரக்ஷு" என்று விட்டு அழுதாள்.... அவன் பிடித்து இருந்த விதம் வலித்தது அதனால் தான் அவளின் கண்கள் கலங்கியது.... ஆனால் அதை தவராக புரிந்து கொண்டவன் சித்து வை கூட்டிக்கொண்டே மாடிக்கு ஏறினான் அதே கேப்பில் இரு நண்பியும் ஹாலை விட்டு வெளியாகி  கிச்சன் பக்கம் சென்றனர்

மாடிபடியில் துள்ளி ஏறியவன்
.
.

அவளது ரூமிற்கு அருகில் சென்றதும் துப்பாக்கியை நீட்டி மெதுவாக கதவை திறந்தான்

"சித்து நீ இங்கயே நில்லுடா மா மாமா பார்த்துட்டு வர்றேன்" என்றான் சித்ராவும் வெளியே  நின்றுவிட்டாள்

குற்றம் யார் செய்தது(முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt