அக்காக்காரி தங்கையை பார்த்து சிரித்து விட்டு
"வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் சொல்ற இடத்துக்கு போலாம் வா"என்றாள் வசு எதுவும் பேசாது குழந்தையை மார்போடு அணைத்து கொண்டு அவளது உடைமைகளை அக்காகாரியிடம் கொடுத்தாள்....
ஹாஸ்பிடலை விட்டு வெளியானதும் டேக்ஸி ஒன்றை நிறுத்தி ஏறு என்றாள்
வசு ஏறிக்கொண்டாள் அக்கா நேராக கோயிலுக்கு கூட்டி போகின்றாள் என்று நினைத்த எண்ணத்தை பொய்யாக்குவது போல் டெக்ஸி போய் நின்றது ஒரு பங்களாவின் முன்
"அக்கா இது என்னக்கா யாரோட வீடு?"என்று கேட்டாள் சித்ராவை மார்போடு இறுக்கி கொண்டு
"வாய மூடிட்டு வா எல்லாம் நம்ம சித்ராவோட நல்லதுக்கு" என்றதும் அதையும் தாண்டி பேசும் தைரியம் இல்லாது....
உள்ளே நுழைந்ததும் அந்த பெரிய பங்களாவின் தோட்டத்தில் சாய்ந்த கதிரையில் அமர்ந்திருந்தான் புவன்
கையில் குழந்தை இருப்பதையும் மறந்து
'அக்கா இது அவன்க்கா வேண்டாம்க்கா வா போலாம்" என்று கையை பற்றினாள்
"நீ வா இல்லேன்னா போ உன்னோட பயத்துக்காக சித்ராவோட நல்ல வாழ்க்கைய நாம அழிக்க வேண்டாம் நாங்க வாரத்துக்கு ஒரு முறை சமச்சி சாப்பிட்றோம் மீதமெல்லாம் பழைய சோறும் கஞ்சியும்ன்னு இருக்கோம் எங்ககூட சேர்ந்து இதுவும் பஞ்சத்துல வாழ வேண்டாம் அந்த நாய்கிட்ட அவன் புள்ளைன்னு சொல்லுவோம் ஏத்துக்கிட்டா பரவாயில்லை வேண்டாம்ன்னா கெஞ்சுவோம் அவன் அதுவும் மடியல்லைன்னா பரவாயில்லை வீட்டுக்கு போவோம் போராடமலே தோற்று போறது முட்டாள் தனம்...." என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே அவன் அமர்ந்து இருந்த இடம் வந்து விட
இருவரையும் நன்றாக பார்த்தவன்
"என்ன?" என்று புருவம் உயர்த்தினான்
"இவ என் தங்கச்சி வசந்தி ஊட்டில இருக்குறா நீங்களும் உங்க ப்ரண்ட்ஸும் பன்ன தப்புல பிறந்த குழந்தை தான் இது ஸோ அந்த குழந்தைய நீங்களே வெச்சிக்கிட்டா நியாயம் இல்லைன்னா சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் அது உங்களுக்கு மானபிரச்சிணை" என்று எடுத்த எடுப்பில் விளக்கமின்றி சிறு தயக்கமின்றி விடயத்தை பேசிக்கொண்டை சென்றாள் வசு நடுங்கியே விட்டாள்
YOU ARE READING
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது)
General Fictionயார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....