இளா போட்டாவை பார்த்தவுடன் அதிர்ச்சியானாள்..அதை அனுப்பிய நம்பரும் தெரியாததாய் இருந்தது.. இதை பற்றி கவினிடம் பேசலாம் என்ற நினைத்த போது மணி பத்தை தொட்டிருந்தது..
எனவே காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து யார் அனுப்பியது என்ற மனக் குழப்பத்துடனே உறங்கிவிட்டாள்...
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக கவின் வீட்டிற்கே சென்றாள்..
அவளின் சோகமான முகத்தை பார்த்தவுடன் கவினின் அம்மா "என்னடா குட்டிமா காலையிலே வந்துருக்க.. அதும் உன் முகமே சரியில்லையே .. எதும் பிரச்சனையா"
என்றவுடன் இதை பற்றி சொல்லி அவர்களையும் வருந்த செய்யவேண்டாம் என்று எண்ணி.."அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தைம்மா.. உங்க பையனை பார்க்காம எனக்கு சோறு தண்ணி எறங்க மாட்டுது.. அதான் பார்த்ததுட்டு போலாம்னு வந்தேன் .. எங்க அவன்" என நக்கலாக சொன்னவுடன்
அவளும் சிரித்துக்கொண்டே.. "பாருடா .. அவ்ளோ லவ்வா.. கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லாட்டி மாமியார் கொடுமை தான்.. அவன் இன்னும் தூங்கிட்டு இருக்கான் குட்டிமா"
இளாவும் சிரித்துக் கொண்டே.." உம்ம்ம்... அப்படியே பண்ணிட்டாலும்.. அத்தம்மா உங்களுக்கு அதெல்லாம் சூட் ஆகாது.. சரி உங்க பையன கொஞ்சம் கொடுமை படுத்திட்டு வரேன் " என கவினின் அறைக்கு சென்றாள்..
அங்கு அவன் தூங்கிட்டு இருந்ததை பார்த்ததும் பன்றதலாம் பண்ணிட்டு தூங்குறத பாரு .. இவனலாம்.. என யோசித்து கொண்டிருந்த போதே கவின் எழுந்து விட்டான் ..
"குட்டச்சி காலையிலே இங்க என்ன பண்றா..சரி பார்ப்போம்" என நினைத்துக்கொண்டு திரும்பும் கண்களை மூடிக்கொண்டான்...
அதை இளா பார்த்துவிட்டாள்.. "கேடி .. நடிக்கிறியா .. என்னிடமே.. இருடா மவனே.." என தனக்குள் சொல்லியபடி பக்கத்தில் இருந்த தலையனையை எடுத்து அவன் முகத்திற்கு அருகில் கொண்டு சென்றாள்..
YOU ARE READING
உயிரினில் கலந்த உறவானவள் ( Completed)
Non-FictionNo1 : 29.4.2018 to 2.5.2018😍 hiii friends..!! ? This is my first story ... ? wattpad la stories read panna start pannathuku aprm nammalum eluthalam apdi nu thoonuchu.. athan seri start pannuvom nu panniten.. ithu oru 2 yrs ku munnadi ennoda dai...