3.7K 207 102
                                    

இளா.. அவள் தோழிகளிடம் தன் காதல் கதையை கூறி முடித்தாள்...

"அடிப்பாவி.. கிராதகி.. இது வரைக்கும் இப்படி ஒரு விஷயத்தை எங்களிடம் இருந்து மறைத்துவிட்டாயே.. ஏய் கயல் நீயும் கூட சொல்லவில்லை.."

"ஏய் தாரணி எனக்கும் இந்த கதையெல்லாம் சத்தியமா தெரியாது புள்ள..."

"ஆமா டி அவளுக்கும் தெரியாது.. அவளுக்கு முகி மாமாவ பத்தி மட்டும் தான் டி தெரியும்...  " என  இளா நக்கலா சிரித்துக் கொண்டே கயலை கோர்த்துவிட.

"அடிப்பாவி .. நாயே .. நிஜமாகவே எனக்கு இந்த  கதையெல்லாம் தெரியாது .. அதும் இல்லாமல் இவ தான் சொல்ல வேணாம் என்று சொன்னா"முறைத்துக் கொண்டே கயல் சொன்னாள்..

இதை கேட்ட இளா.. "சரி சாரி டி .. அதான் இப்போ சொல்லிட்டேன்ல... ப்ளீஸ் ... நாங்க இப்போ கிளம்புறோம் ..பஸ்க்கு லேட் ஆகிட்டு... பாய்.. " சொல்லிட்டு அவர்களை அதற்கு மேல் பேச விடாமல் கயலை இழுத்துக் கொண்டு பேருந்து நிலையம் சென்றனர்..

கிராமம் என்பதால் அடிக்கடி பேருந்து இருக்காது‌.. நேரம் வைத்து மட்டுமே வரும் .. 

அதனால்  பஸ்சுக்காக காத்து கொண்டு இருந்தனர்.. அப்போது...

"ஏய்.. கயல்.. உனக்கு இன்னைக்கு செம லக்கி நாள் போல .. " என சொன்னவளை

"ஏன் புள்ள.. அவள்க என்னை திட்டுனதுக்கா... உன்னால் தான்" என அலுத்துக் கொண்டவளை

"ஏய் லூசு .. கொஞ்சம் உன் திருவாயை மூடிக்கொண்டு உனக்கு கிடைக்க போகும் தரிசனத்தை அந்த பக்கம் திரும்பி பார்"

"ஏய் இளா.. உண்மையாவே உனக்கு ஏதாவது ஆகிட்டா...என்ன இருக்கு அந்த பக்கம்" திரும்பி பார்த்துட்டு..

"ஓஓஓ.. ரவி அத்தான் ...(இவர் நம்ம கயலோட ஆளு.. முன்பே இவருடைய இன்ட்ரோ முடிச்சுட்டு)

பரவாயில்லை.. கொஞ்சம் லக்கி டே தான் போல.. " என இளாவிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே

இவர்களை கண்ட ரவி அவர்கள் அருகில் வந்து வண்டியை நிறுத்தியவன்

உயிரினில் கலந்த உறவானவள் ( Completed)Donde viven las historias. Descúbrelo ahora