3.1K 156 55
                                    

கவின் இளாவை பார்த்து அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்..
கவினே அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்..

இளாவும் இதற்காக தான் ஏங்கியவள் போல் இறுக அணைத்து அழ ஆரம்பித்தவளை சுற்றத்தை மறந்து தன்னோடு அணைத்துக் அவள் தலையை ஆதரவாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்...

"மாமா போதும் .. இங்க நாங்கெல்லாம் இருக்கோம்" என்ற ஆதவ் குரல் கேட்டவுடன் இருவரும் தன்னிலை அடைந்து விலகி நின்றனர்...

கவினின் அம்மா இளாவின் குடும்பம் அனைவரும் அங்கே நிற்பதை பார்த்து கவின் " உங்க எல்லாருக்கும் இங்கே நடப்பது புரியாமல் நிக்கிறிங்க என்பது தெரியுது.. ஆனால் இதற்கான காரணத்தை இவள் தான் சொல்லனும்.. பெரிய தியாகி இவ.. விட்டுக் கொடுக்கிறாளாம் .. " என்று அவன்‌ முறைப்பதை பார்த்து இளா தலையைக் கவிழ்த்திக் கொண்டாள்..‌

இப்போது‌ எல்லாரும் அவளின் விடைக்காக அவளை‌ பார்த்துக் கொண்டு இருந்தனர்..

"அது வந்து.. உண்மையாவே கவினை கல்யாணம் பண்ண எனக்கு .. விருப்பம் இல்லை" என்று திக்கித் திணரி சொன்னவளை..

"ஏய்.. உன்னை.. அறிவே இல்லையாடி உனக்கு .. நீ நினைக்கிற மாதிரி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லடி பைத்தியகாரி.. அந்த கவிதா லூசு தான் சொன்னுச்சுனா அதையும் நம்பி தொலைச்சு உசுர வாங்குற" என்றவுடன்

இளா பிரகாசமான முகத்தோடு "அப்படியா.. உண்மையாவா மாம்ஸ்.. எனக்கு அப்போ குழந்தை பிறக்குமா.. ஆனால் அவுங்க எனக்கு இருக்க கட்டியை ஸ்கேன்ல காட்டினாங்களே.. நான் கூகுளில் போட்டு பார்த்த போதும் குழந்தையின்மை வரும் என்று போட்டு இருந்துச்சே.. .நீ எனக்காக பொய் சொல்றியா " என்றவளை கவலையோடு எப்படி சொல்லி புரிய வைப்பது என யோசித்து கொண்டிருந்தான்..

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கவின் அம்மா .. " டேய் இங்க என்னடா நடக்குது .. சொல்லுடா .."

"அம்மா .. அவள் சொல்லமாட்டா.. நானே சொல்றேன் .. இவ மாதவிடாய் பிரச்சனைக்காக என்னோட படிச்ச கவிதாவிடம் காட்டியிருக்காள்.. அந்த கவிதா என்னை லவ் பண்ணி நான் முடியாதுனு சொல்லிட்டேன் என்ற கடுப்புல இவளுக்கு இருக்க சின்ன பிரச்சனையை பெரியதாய் சொன்னதால மேடம் என்னோட வாழ்க்கை சந்தோசமா இருக்கனும் என்று கல்யாணத்தை நிறுத்திட்டாங்க" என்று‌ கோபமாய் ஒரு பார்வை பார்த்தான்..

உயிரினில் கலந்த உறவானவள் ( Completed)Donde viven las historias. Descúbrelo ahora