ஆரம்பம் -1

9.3K 173 52
                                    

கரையை கடக்க துடிக்கும் அலைகள் ஒன்றை ஒன்று முந்தி கொண்டும் கரையை தொட்ட அலைகள் தன்னை பூமிதாயின் பாதத்தை உடன் கொண்டு வரும் நுரைபூக்களால் வணங்கி வந்த சுவடு தெரியாமல் ஆழ்கடலுக்குள் சென்று விடும் ....

கடல் அலைகளையே பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தாள் அவள்(நம் கதையின் நாயகி).

மம்மி ப்ளீஸ் ஒரு டைம் தண்ணில கால வச்சுக்கவா ....மகள்

நோ பேபி மா உங்களுக்கு ஒத்துக்காது ஃபிவர் வந்து விடும்-அம்மா

அப்புறம் ஏன் என்னை பீச்சுக்கு அழைத்து கொண்டு வந்தீங்க இப்படி இருக்க வீட்டில் டிவியை பார்த்து கொண்டு இருந்து இருக்கலாம் போ மா உன் பேச்சு கா.....

செல்லம் ஏன் கோபத்துடன் இருக்கீங்க ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு வந்த அப்பாவை பார்த்ததும் வாயெல்லாம் புன்னகையுடன்.....

தேங்க்ஸ் டாடி யூ ஆர் சோ ஸ்வீட்.மம்மி நோ ஸ்வீட் என்று முகத்தை சுருக்கிக் கண்ணை விரித்து கூறும் ஐந்து வயது குழந்தையை பார்த்ததும்......

தன்னையும் அறியாமல் வரும் பழைய ஞாபகங்களினால் ஏக்கமும் தவிப்பும் அதிகமானதே தவிர குறையவில்லை...

நோ ....நோ...சங்கவை நீ இப்படி தவிப்பு ஏக்கம் எல்லாவற்றையும் மனசில் இருந்து அழித்துவிடு அதுதான் அப்பா அம்மாவுக்கு நல்லது இல்லைனா...
நினைத்து பார்க்கவே பயமாக இருக்கே ... உள்ளுக்குள் துடித்து கொண்டு இருந்தாள்.

திடிரென தன் தோல் மீது கை படவும் அதிர்ச்சியில் திரும்பியவள்

புன்னகையுடன் நின்ற தோழி வாணியை பார்த்ததும் சீராக மூச்சு விட்டாள்....

ஹ...ஹ...ஹ...என்னடி பயந்து விட்டாயா?😲😲😲

வாணி எரும ஏன் இப்படி பயமுறுத்துன போடி... கொஞ்சம் நேரத்தில் மூச்சே நின்றுருக்கும்.

சவி(சங்கவை) கண்ணு ஏன் கலங்கி இருக்கு ....அழுதியா கோபத்துடன் கேட்ட தோழியை பார்த்து தலை குனிந்தாள்.

அம்மா அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்று சொன்னவளின் நிலையை தெரிந்த காரணத்தால்...

ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)Where stories live. Discover now