ஆரவ் போலிஸ் உடையில் அல்லாமல் மப்டியில் ஒரு டீக்கடைக்கு சென்ளான் சரியாக காலை 9மணியளவில் ,அண்ணே இரண்டு டீ என்று ஆர்டர் செய்து அமர்ந்தான். "தம்பி நீங்க ஒருத்தர் மட்டும் தான் இரண்டு டீ சொல்லியிருக்கீங்க ???😊
வேணும் அண்ணே நீங்க போடுங்க...
அப்படியா சரி பா தம்பி. சிறிது நிமிடங்களில் டீ தயாராக வந்தது அதை வாங்கி பருகிக்கொண்டு இருந்தான். எதிர் டேபிளில் ஒருவன் முகத்தில் கர்ச்சிப் கட்டியபடி அமர சற்றும் யாரும் எதிர்பாராத நிலையில் ஆரவ் அந்த இன்னொரு க்ளாஸ் டியை அவன் மீது ஊற்ற சூடு தாங்காமல் ஐயோ அம்மா என்று கதற அந்த முகத்தில் இருந்த கைகுட்டை கீழே விழ அந்த பயில்வான் பாண்டி சிக்கினான்.
"ஏண்டா பொரம்போக்கு உன்னை என்னால பிடிக்கமுடியாது நினைச்சியா ம்ம்ம்... ராஸ்கல் முதல்ல உனக்கு விலங்கு மாட்டி லாக்கப் ல வைக்கிறேன் மத்தது அப்புறம் பாத்துக்குறன். உன்னை ஏவிவிட்ட ராஜ் தானா வந்து என் கைல சிக்கிருவான் அவனோட கையாளு நீ மாட்டிகிட்டல இப்ப அவனால ஒன்னும் பன்ன முடியாது. அந்த டெய்லர் சிக்கட்டும் ஆதரம் கிடைச்சிரும் அப்புறம் பாரு ஜெயில் ல களி தாண்டி. என் கன்னு முன்னாடியே லதாவை கொன்னல என்ன தைரியம் டா உனக்கு.
🌸🌸🌸🌸🌸🌸
மதியம் 1மணி இருக்கும் ராசாத்தி தனது வீட்டில் கோழிகறி குழம்பு வைத்து சாதம் வடித்து ஆசையாய் தனது எதிர்கால கணவனாகிய ஆரவ்வை அழைத்தாள்.
"என்னங்க சாப்பிட வீட்டுக்கு வாங்க ..இல்லை ராசாத்தி இன்னொரு நாள் வரனே ...
ஐயோ என்னங்க நீங்க உங்களுக்கு பிடிக்குமேனு கோழி குழம்பு ஆக்கியிருக்கேன் வந்து ஒரு வாய் சாப்பிட்டு போங்க...என்று அவள் கெஞ்சிய பிறகு அவள் வீட்டுக்கு சென்றான்.அவள் தட்டு வைத்து சோறு பறிமாற அவன் அதை ஒருவாய் வைத்தவுடன் அவனுக்கு லதா ஞாபகம் வந்தது..... ஆம் கல்யாணம் முன்னாடி
ப்ளாஷ் பேக்.ஆரவ் இந்தாங்க கோழி குழம்பு என்று டிபன் பாக்ஸை திறக்க கமகமவென கோழி குழம்பு மிதக்க "ஏய் லதா என்னடி நீயா செஞ்ச இது சூப்பர் டி. ..ஆமா நீ வெஜிடேரியன் தானே ???😊நீயேன் இதெல்லாம் செய்ற????????????????
ஏன் செஞ்சா என்ன???உங்களுக்கு பிடிக்கும்னு செஞ்சன்..கல்யாணம் ஆயிட்டு பாருங்க உங்களுக்காக எல்லாம் செஞ்சு போடுறன்.
தாங்க்ஸ் லதா....
ஹாஹா எதுக்கு??
எனக்காக எல்லாமே மாத்திக்கிறியே ....உன்னை நிறனைச்சா எனக்கு பெருமையா இருக்கிறது. என்று அவள் கைகளை பிடித்து கூற அவளோ அவன் இதயத்தில் சாய்ந்துகொண்டு "உனக்காக நான் இதுக்கூட பன்னலனா எப்படி ஆரவ்"😊
சுயநினைவில் வந்தவன் "ராசாத்தி குழம்பு சூப்பர்... என்று பாராட்டி அவளை மகிழ்வித்தான்.
தொடரும்.
YOU ARE READING
ஆரவ்
General Fictionகதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்...