3

500 15 7
                                    

நாட்கள் கடந்துக்கொண்டே இருக்க எழிலரசன் தன் வேலைகளை கவனிக்க துவங்கினான். அவன் ஒரு பதிப்பகம் நடத்திவரவே புது நாவல்களை எல்லாம் படித்துவிட்டு அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு புத்தகம் அச்சிட ஏற்பாடு செய்துகொண்டு இருந்தான். தனது கைப்பேசி அழைக்க "எதிர்முனையில் சார் அந்த காத்திருக்க காதல் வந்ததோ கதையை படிச்சிங்களா பிடிச்சிருக்கா கதை????எப்ப அச்சடிச்சு வெளியிட போறிங்க????என்றவனுக்கு "அதுக்கென்ன சார் காதலி வந்து சரின்னு சொன்னவுடனே பன்னிடுவேன் என்று நக்கலடிக்க சார் ஆனாலும் உங்களுக்கு குறும்பு அதிகம் தான் சார் என்று கூற "என்ன பன்றது சார் வேலை பன்னும்போது களைப்பு தெரியாது இருக்க இப்படி குறும்புத்தனம் பன்னாதான் நல்லாருக்கு இல்லைனா வெறுப்பா இருக்கிறது, அதுவும் இந்த துறையில் இருக்கிறவங்க கலகலப்பா இருந்தா தான் நல்லாருக்கும் ,கதையை படிக்கிறப்ப சஞ்சலமில்லாம இருக்கும்.
"அது என்னமோ சரி தான் எழில் சார்.....சரி கதையை படிச்சிட்டு கூப்பிடுங்க என்றவுடன் ஓகே சார் என்று போனை வைத்துவிட்டு மீண்டும் வேலையை கவனிக்க எதிர்பாராத விதமாக அங்கு பூங்குழலி வந்து நிற்க "ஏய் நீ ஏன் இங்கெல்லாம் வந்துகிட்டு என்ன விஷயம் ???☺️

ஒன்னுல மாமா நாளைக்கு அத்தை மாமா எல்லாம் கைநினைக்க எங்க வீட்டுக்கு வராங்க ஸோ நாளைக்கு நீங்க வரமாட்டிங்களாமே அதான் இப்ப வந்து உங்களை பார்த்துட்டு போலாமேனு....

ம்ம்ம் நான் என்ன கொலு பொம்மையா டி தினமும் வந்து பார்த்துட்டு போறத்துக்கு பேசாம கம்முனு போய்டு.

ஹாஹா பரவாயில்லை நீ கூட நல்லா காமெடி பன்ற சரிசரி நான் கிளம்புறன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப நேர்ந்தபோது செழியன் அங்கு வந்தான்.
"என்ன பூங்குழலி அண்ணனை பார்க்க வந்தியா???
இல்லை உன்னை பார்க்க தான் வந்தேன் நீ இங்க உன் அண்ணணுக்கு உதவியா இருக்கிறனு கேள்வி பட்டேன்.
அதுசரி என்ன எதுக்கு பார்க்கனும்???
ஆங் அதுவா சின்ன வயசுல நீ எனக்கு குடுத்த லவ் லெட்டர்ஸ் எல்லாம் திருப்பி உன்கிட்டயே ஒப்படைக்கலானு தான் அதான் நான் உனகில்லைனு ஆயிடுச்சு அப்றம் என்ன இதெல்லாம் வச்சிகிட்டு இந்தா பிடி இது நீ ஐந்தாம் வகுப்பு படிச்சப்போ தந்த லவ் லெட்டர் இது ஏழாவது படிக்கிறப்ப தந்தது ...ஆங் அப்றம் இது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்ப தந்தது. என்ன எல்லாம் கரெக்டா இருக்கா???? இங்க பாரு ஆனால் நான் ஆரம்பத்துல இருந்து உன் அண்ணன் எழிலரசனை தான் லவ் பன்னேன். நான் ஆசைபட்டபடியே எழில் மாமாவை கட்டிகிட்டு சந்தோஷமா வாழ போறேன்.

வாழு வாழு அதுக்கு முதல்ல என் அண்ணன் ஒத்துக்கனுமே 😁😁😁😁என்று மனதினுள் கூற "ஹலோ என்ன அங்க முனுமுனுக்கிற ??? இனிமே அண்ணி னு கூப்பிடு ஓகேவா???

சரிங்க பன்னி.....

என்ன???

ஏய் இங்க பாரு இந்த அண்ணி கிண்ணி எல்லாம் கூப்பிட வராது பூங்குழலி அம்புட்டு தான். சின்னவயசுல இருந்து எப்படி கூப்பிட்டு பழகுனேனோ அப்படி தான் நான் கூப்பிடுவேன். என்றதும் பூங்குழலி மூஞ்சியை சுளித்துவிட்டு இடத்தை விட்டு நகர எழில் செழியனை ஏறிட்டு பார்க்க "என்ன அண்ணே அப்படி பாக்குறிங்க என்றதும் "து இதெல்லாம் ஒரு பிழைப்பு எதுக்கு டா அவளுக்கு இவ்வளவு லவ் லெட்டர் ????
"ஓ அதுவா !ஆமா பூங்குழலி என்ன உனக்கு மட்டும் தான் முறை பொன்னா எனக்கும் தான் அதான் சின்னவயசுல எனக்கு அவமேல ஒரு க்ரஷ் வந்துச்சு அதெல்லாம் பழயசு இப்ப நீ அதையெல்லாம் கிளராத வேலையை பாரு என்றதும் "ஆ..ஆ இது தெரியாம போச்சே பெசாம பூங்குழலியை இவனோட சேர்த்து வச்சிட்டா நம்ப ரூட் ஓரளவு க்ளியர் ஆன மாதிரி தான் ம்ம்ம் ரைட்டு.

"ம்ம்ம் அண்ணே ஏதோ பெருசா ப்ளான் போடுராப்ல தெரியுதே என்று அவன் கிண்டலடிக்க "ஒன்னுல டா தம்பி"என்று வேலையை கவனிக்க ஆமா அண்ணே நீ யாரையோ விரும்புற போல ????

ஆங் இது யார்ரா சொன்னது உனக்கு ???

ம்ம்ம் அன்னைக்கு நம்ப வீட்ல இருக்கிற ராகுல் வாண்டு உன் கைப்பேசி வச்சு ஏதோ கேம் விளையாடினான் அப்ப எதர்ச்சையாக ஜானு அப்டிங்கிற பேருல ஏதோ வரிசையா மெஸஜ் வந்ததை பார்த்துட்டு ஓடி வந்து அண்ணே னு என்கிட்ட காட்டினான் நானும் அதையெல்லாம்  படிச்சிட்டேன் என்று ஓரக்கண்ணால் எழிலை பார்த்தபடி கூற அவனோ ஒரு முறை முறைக்க எழுந்திருந்து ஓட முயல தன் தம்பியை விரட்டியபடியே அட போக்கத்தவனே நீ ஒருத்தனே போதுமே டா எனக்கு உலை வைக்க ......

அப்ப அண்ணன் யாரையோ விரும்புறது உண்மை அப்படிதானே???😊

உன்னையே ......மவனே வாடிநீ உனக்கு இருக்கு.

நான் வந்தா தானே வீட்டுக்கு போ போ😁

வராமயா போயிடுவ இரு உன்னையே

சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் என்னோட நிஜ அண்ணியை எப்ப காட்டபோற ??😊என்றவுடன் "கூடிய சீக்கிரமே காட்டுறன்"என்று புன்முறுவலுடன் தன் வேலையை மீண்டும் தொடர்ந்தான்.

தொடரும்

காதல் கண்கட்டுமோDonde viven las historias. Descúbrelo ahora