💙29💙

2.4K 106 23
                                    

"அப்படி தான்டா பேசுவேன். உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல. தேவையில்லாம நான் வேலை செய்யற இடத்துக்கு வந்து, என் மானத்தை வங்கற... நீ ஒரு சீப் ஃபெல்லோ"... என்று பேசிக்கொண்டே சென்ற தாராவை அருகில் இழுத்தவன், தாராவின் வாயை அடைக்க... அவள் இதழ் மீது இதழ் பதித்தான். "

அர்ஜுனை பிடித்துத் தள்ளி, அவன் கன்னத்தில் 'பளார்' என்று ஒரு அறை விட்டவள். "ஹவ் டார் யூ?" என்று கண்கள் சிவக்கக் கத்தினாள்.

"இதோ பாரு. உன்னை திருப்பி அடிக்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஒரு பொண்ணக் கைநீட்டி அடிக்கக் கூடாதுன்னு பொறுமையா இருக்கேன்." என்று பல்லைக் கடித்து சொன்னான்.

"தைரியம் இருந்தா மேல கை வெய்டா பார்க்கலாம்." என்று இவள் முறைக்க...

"என்னால முடியாது டி. ஏனா, உன்ன எனக்கு அவ்வளவுப் பிடிக்கும்..." என்று பெருமூச்சு விட்டவன்... "என்னை நான் நிரூபிக்க, எனக்கு ஒரு ரெண்டாவது வாய்ப்பு கொடுடி. நான் உண்மையாவே மாறீட்டேன். உன்கூட சந்தோஷமா வாழ நினைக்கிறேன். ஏன்டி என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற?" என்று அவள் கண்களை காதலாகப் பார்த்தான் அர்ஜுன்.

அவன் இப்படி ஒரு பதில் கூறுவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அர்ஜுனின் கோபமான குணத்தை நன்கு அறிந்தவள் இவள். இப்படி அமைதியாக அர்ஜின் பேசுவான் என்று அவள் கனவில் கூட நினைத்தது இல்லை.
'உண்மையாவே இவன் மாறீட்டானா? நாம தான் இன்னும் பழசை மறக்காம இவன கஷ்டப்படுத்துறோம் போல. இவனுக்கு நாம ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?' என்று எண்ணிய
தாராவிற்கோ அவனை கன்னத்தில் அறைந்ததை நினைத்து மனதிற்கு கஷ்டமாக இருந்தது... இதற்கு மேல் அவனை டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தாள் அவள்...

"சாரி அர்ஜுன். நான் அவசரப்பட்டு உன்மேல கை வெச்சுட்டேன். "

'என்ன அதிசயம். தாரா சாரியெல்லாம் சொல்லறா? இன்னைக்கு மழை வந்த மாதிரி தான்'... என்று எண்ணியவன்... "நானும் சாரி. உன் பெர்மிஷன் இல்லாம உன்ன கிஸ் பண்ணிட்டேன்." என்றான்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now