24

418 54 53
                                    

என்னதான் ஒரு மனிதனின் இயல்பை சூழ்நிலை மாற்றும் என்றிருந்தாலும் பெண்ணுக்கு உரிய வெட்கம், நானம் என்பதெல்லாம் என்றும் எச்சந்தர்ப்பத்திலும் அவளை விட்டு நீங்காது. இங்கு அதே போன்று ஒரு நிலையிலேயே பிருந்தாவும் இருந்தாள்.

வெளியில் இருந்த விக்ரமோ ஒரு இனிமையான அவஸ்த்தையில் மாட்டிக்கொண்டிருந்தான். அவன் மனதுக்குள்

'நல்ல வேல கவி இருந்தா, இல்லைன்னா இன்னைக்கு என்னென்ன ஆகியிருக்குமோ'
என்று எண்ணியவன் கவியை பார்க்க அவள் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.தன் தங்கையின் பார்வை எதனால் இப்படி உள்ளது என தெரிந்தவன் தலை குனிந்தான்.

"டேய் எருமை மாடு, என்னடா பண்ணியிருக்குற. ஒரு பொண்ண இப்படியா பார்ப்ப. இங்க பாரு நீ விட்ட ஜொல்லுல இங்க ஒரு ஆறே ஓடுது" என்றாள். விக்ரமுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இருந்தாலும் தன் தங்கையிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என எண்ணியவன்

" நான் என்ன பண்ணேன். ஒரு பொண்ணு அப்படி வந்ததும் கொஞ்சம் தடுமாற்றத்துல பார்த்துட்டேன். இது தப்புதான் இல்லைன்னு சொல்லல.ஆனா நானும் ஒரு ஆம்பளமா. அதுக்குனு கெட்டவன்லாம் இல்லை.இவ வேற அழகா இருக்காளா,சரி கவி அழக ரசிக்கிறது தப்பா? இல்லை தானே?" என்று கேள்வியும் கேட்டு பதிலும் அவனே கூற இப்போது கவி தலையில் அடித்துக்கொண்டாள்.

"ஆமா நீ எதுவுமே பண்ணல பாரு, அவங்க குளிச்சிக்கிட்டு இருக்கும் போது கால் வந்தது. அதனாலதான் அவங்க அப்படியே வந்துட்டாங்க. அதுவும் அவங்க இருந்த டென்சன்ல என்ன டிறஸ் போட்டிருக்கோம் என்றத மறந்துட்டு உனக்கு கதவ திறந்திட்டாங்க. அதுக்குனு இப்படியா நீ பார்ப்ப. இரு அம்மாகிட்ட சொல்லிகொடுக்குறேன்" என்று கூறிய நேரம் பிருந்தா குளியறையில் இருந்து நீல நிற சல்வார் அணிந்து தோகைவிரித்தாடும் மயிலின் அழகுடன்  வந்தாள்.

இங்கு விக்ரமோ
'என்னஇவ ,எந்த டிறஸ் போட்டாலும் அழகா இருக்காளே' என மனதுக்குள் நினைக்க கவி அவனின் பார்வை போன போக்கை கண்டு அவனை கண்களாலேயே முறைத்தாள். தான் வந்த வேலை என்ன, இப்போது தான் செய்து கொண்டிருக்கும் வேலை என்ன என்று மனதுக்குள் தன்னை தானே திட்டிக்கொண்டான்.

ஆகாயம் தீண்டாத மேகம்Where stories live. Discover now