அத்தியாயம் 16

1.5K 51 2
                                    

ஆதி அவர்கள் அனைவரையும் அழைத்து சென்ற இடம் அவனுடைய தோட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய வீட்டிற்கு அங்கு அவன் ரித்விகாவின் அத்தை மகன் அவனுடைய தம்பி மற்றும் இந்துவின் அப்பாவை அடைத்து வைத்திருந்தான். அவர்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களுடன் ஆதி மற்றும் அஜயின் பள்ளி நண்பனான முகிலன் தற்போது காவல் அதிகாரியாக பணி புரிபவன் உடன் இருந்தான்.

ஆதி முதலில் முகிலனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான் "இவன் என்னோட ஸ்கூல் பிரண்ட் பெயர் முகிலன் ஐபிஎஸ் ஆபீஸரா பண்ணிக்கிட்டு இருக்கான்" என்று கூறினான். ஆதி கூறியதைக் கேட்ட ராகவன் மற்றும் ஆனந்த் முகிலனை பார்த்து சினேகமாக புன்னகைத்தனர். ஆனால் அஜய் மட்டும் முறுக்கி கொண்டு இருந்தான்.

அதைப் பார்த்து புன்னகைத்த முகிலன் அஜயின் முதுகில் ஒன்று வைத்து விட்டு "சாரி மச்சி என்னால உன்கிட்ட சொல்ல முடியல உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு ஆதி  சொல்லிட்டான். அதனால தான் சொல்லல அதுக்காக ரொம்ப முறுக்கிக்கிட்டு நிக்காத ஏற்கனவே உன்னோட மூஞ்சி பார்க்க சகிக்காது. இதுல நீ இப்படி இருந்தா உன்னை பார்க்கிற ஒன்னு ரெண்டு பொண்ணு கூட பார்க்காது" என்று சிரிக்காமல் கூறினான்.

அதில் இன்னும் கடுப்பான அஜய் "போதும்டா என்ன அசிங்க படுத்தியது வாங்க போய் மற்ற வேலைகளை பார்ப்போம்" என்று கூறினான்.

ஆதி முதலில் இந்துவின் தந்தையை பார்த்து "உங்களை எதற்காக இங்கே கூட்டிக் கொண்டு வந்திருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் கூறுகிறேன். இதற்குமேல் உங்கள் மகளால் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அதனுடைய பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்" என்று எச்சரித்தான்.

இந்துவின் தந்தை ஏற்கனவே தன்னை கடத்தி வந்ததில் ஆதியை குறைவாக மதிப்பிட்டு விட்டோம் என்று புரிந்து கொண்டவர். அவனுடன் ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமல்லாமல் நண்பர்களும் துணை இருப்பதால் கொஞ்சம் அமைதியாகத்தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் ஆதியிடம் "நான் பார்த்துக்கொள்கிறேன் அவளால் இனி உங்களுக்கு பிரச்சனை இருக்காது ஆகையால் தயவுசெய்து என்னை விட்டுவிடு" என்று கூறினார்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ