அத்தியாயம் 9

2.9K 89 8
                                    

தனியாக பேச வேண்டும் என்று சாதனா மற்றும் மதியை அழைத்து வந்த சாகித்யா சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள் அவளுடைய அமைதி மற்ற இருவருக்குள்ளும் ஒரு புயலைக் கிளப்பி விட்டிருந்தது. சிறிது நேரம் பொறுத்து பார்த்த மதி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் "என்னாச்சு என்ன பேசணும் எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு பேசணும்னு கூட்டிட்டு வந்து அமைதியா இருந்தா என்ன அர்த்தம்" என்று கேட்டாள்.

இருவரையும் பொதுவாக பார்த்த சாகித்யா சாதனாவைப் பார்த்து "உன்ன மாதிரியே வேற யாராவது இருக்காங்களா உன்னோட முக அமைப்பு மாதிரி நீ யாரையாவது பார்த்து இருக்கியா" என்று கேட்டாள்.

அவள் கேட்டது இருவருக்கும் உள்ளுக்குள் பக் இருந்தாலும் வெளியே அமைதியாக பார்த்த சாதனா "இல்ல சாகித்யா அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை ஆனால் என்ன மாதிரி கண்டிப்பா வேற யாராவது இருக்கலாம் ஒருத்தர் மாதிரி இந்த உலகத்துல ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்லி இருக்காங்க அல்லவா சரி நீ எதுக்காக இந்த கேள்வி கேக்குற" என்று பதில் கேள்வி கேட்டாள்.

சாகித்யா "நீ கேட்ட கேள்விக்கு பதில் கடைசியா சொல்றேன் உங்க ரெண்டு பேருக்கும் என்னோட புருஷன் ருத்ரனை முன்னாடியே தெரியுமா காலேஜில வச்சதா முதல்தடவை பார்த்தீர்களா" என்று கேட்டாள்.

சாதனா "இதுக்கு முன்னாடியே தெரியும் நீ அந்த அண்ணாவ அடிச்ச அன்னைக்கு நாங்க அங்க தான் இருந்தோம் நீ தப்பா புரிஞ்சுகிட்ட விஷயத்தை நாங்க பதறிப்போய் சொன்னோம் ஆனா அதுக்கு முன்னாடியே அந்த அண்ணா புரிஞ்சு வச்சிருந்தாங்க அதனால பேச ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று கூறினாள்.

மதி "என்னதான் பிரச்சனை எதுக்கு இப்ப இந்த விஷயம் எல்லாம் எங்க கிட்ட கேட்டுட்டு இருக்க உன் மனச திறந்து இருக்கிற போல குழப்பத்தையெல்லாம் சொல்லு எங்களால முடிஞ்சா பதில நாங்க சொல்றோம்" என்று கூறினாள்.

என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)Where stories live. Discover now