Office -16
லெட்சுமி 35 வருடத்திற்கு முன் நடந்த கதையை தன் குடும்பத்திற்கு சொல்ல தொடங்கினார்.
அவங்க சொல்றாங்களோ இல்லையோ நா சொல்றேன் flashback ah எல்லாரும் மேல பாருங்க.
அழகிய காலை விடியல் பாண்டியன் இல்லம் பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்தது.
அழகு தேவதையாக ஏழு மாத கர்ப்பிணியாக சபையில் அமர்ந்து இருந்தார் லெட்சுமி பாண்டியன்.
பாண்டியன் அம்மா தங்கம்: இந்த குடும்பத்தோட மூத்த வாரிசு அது உன்னால கிடைக்க போகுது என்று சொல்லி லெட்சுமி நெற்றியில் முத்தமிட்டாள்.
பாவாடை தாவணியில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருந்தாள் ஒரு பெண்.
உறவினர் 1: என்ன தங்கம் பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துட்டு போல.
உறவினர் 2: அவங்களுக்கு என்ன சொந்தத்துலயே மாப்பிள்ளை இருக்கே.
தங்கம்: சொந்தத்துல ஏது மாப்பிள்ளை
உறவினர் 1: உன் மருமக லெட்சுமி தம்பி முருகன் தான்.
தங்கம்: பொண்ணு எடுத்த வீட்டுல பொண்ணு குடுக்குற பழக்கம் எங்களுக்கு கிடையாது.
உறவினர்: இது என்ன புது கதை. நல்ல குடும்பம்னா குடுக்க வேண்டியது தான.
தங்கம்: பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தா தலச்சம் பிள்ளைக்கு ஆகாதுனு எங்க பரம்பரை வழக்கம்.
பாண்டியன்: என் தங்கச்சி பார்வதிக்கு ராஜ வாழ்க்கை அமையும்.
வேலைக்கே போகாம சுத்திக்கிட்டு இருக்குற முருகன் கூட சேத்து என் தேவதைய பேசாதீங்க.விழா நிறைவடைய அன்றைய நாள் கடந்தது.
PS வணிக வளாகம்....
P - பாண்டியன் S - செல்வம் இருவரும் கூட்டாக தொழில் செய்து வருகின்றனர்.
செல்வம்: வா பாண்டியா
பாண்டியன்: என் செல்வம் விஷேசத்துக்கு வந்துட்டு உடனே கிளம்பிட்ட
செல்வம்: கொஞ்சம் வேல அதான் பா. நல்லபடியா முடிஞ்சுதா விஷேசம்