Office -19
கதிர்: 😳 5 வருஷமா
பார்வதி: என்னடி சொல்ற
முல்லை: ஆமாம்மா... காலேஜ் படிக்கும் போது இருந்தே
பார்வதி: 😲
முல்லை: ஆமாமா... காலேஜ் போன முதல் வருஷமே அவர எனக்கு பிடிச்சு போச்சு.
என் அத்த பையன்னு அவர நா விரும்பல. அவரு யாருனு தெரியாத போதே அவர் மேல வந்த காதல்...
எப்பவும் இந்த காதல இழக்க நா விரும்பல...
கதிர் மாமா எனக்கு வேணும்...
அவர் தான் என் வாழ்க்கை...
அவர தான் கல்யாணம் பண்ணிபேன்..
யார் தடுத்தாலும் அவர் தான் என்ன புருஷன் இத அப்பாகிட்ட சொல்லிடும்மா😭😭
பார்வதி: 😲
முருகன்: 😡
பதிலுக்கு காத்திராமல் முல்லை இணைப்பை துண்டித்தாள்.
கதிர்: 😳
முல்லை: என்ன
கதிர்: 5 வருஷமா
முல்லை: ஆமா
கதிர்: சொல்லவே இல்ல
முல்லை: நீ கேக்கவே இல்ல
கதிர்: விளையாடாத முல்ல
முல்லை: ஆமா 5 வருஷம் தான். இந்த கதிர என் மனசுல ஏத்தி 5 வருஷம் ஆகுது.
கதிர்: எப்போ இருந்து
முல்லை: நா முதல் நாள் கல்லூரியில் வந்து பார்த்த நபர் நீங்கள் தான்.
அன்று ரகிங்குக்கு பயந்து மரத்தின் பின் ஒழிந்து கொண்டேன்.
அங்கு வேறு ஒருவருக்கு ரகிங் நடக்கும் போது அதை தட்டி கேட்ட நீங்கள் அன்றே என் கண்ணுக்கு நாயகனாக தெரிந்தீர்கள்.
ஒவ்வொரு நாளும் உங்களை பார்க்க உங்க floor ku வருவேன்.
மறைந்து இருந்து உங்களை பாத்துடு போவேன்.
உங்களுடைய படிப்பு விளையாட்டு நடனம் திறமை நல்ல குணம் என எல்லாமே உங்கள் மேல் எனக்கு காதலை ஏற்படுத்தியது.