Marukkathe Nee Marakkathe Nee - 14

773 105 196
                                    

மறக்காதே நீ மறுக்காதே நீ - 14
எட்டாவது நாள்...

மதியம் மணி இரண்டு..

அகிலன், "சித்தார்த், இன்னிக்கு என்ன எட்டாவது நாளா? சம்யுக்தா ஒகே சொல்லிட்டாளா?" என சிரித்தபடி கேட்டான்.

"எனக்கு ஒகே சொல்லாம, வேற யாருக்குச் சொல்ல போறா? வேற யாருக்காவது சொல்ல தான் விட்டிருவேனா?" என அமர்த்தலாக கேட்டான் சித்தார்த்.

"ஸிட், சம்யுக்தா உன்னை மன்னிச்சிட்டாளா? அவ கூட பேசினியா?" என ஆர்வத்துடன் கேட்டாள்.

"உன் தங்கை எங்கே பேசறா? பக்கத்திலே போனாலே எரிஞ்சு விழறா" என கடுப்பாக சொன்னான்.

"ஸார் என்ன சாதாரண வேலையா செஞ்சீங்க. நீங்க செஞ்ச வேலைக்கு உங்களை எங்கிட்ட மாட்டி விட்டிருக்கனும்" என சீரியசாக சொன்னான்.

"நானோ, தாத்தாவோ அவகிட்ட என்னை காப்பாத்த சொல்லி கேட்கலை. அது அவளும், அவங்கப்பாவும் எடுத்த முடிவு" என அதே தொனியில் பதில் சொன்னான்.

"அகில், நான் செஞ்ச தப்புக்கு தண்டனையா இந்த ஒன்றரை வருஷம் அவளை பார்க்காம, பேசாம இருந்துட்டேன். இனிமே என்னால அவளை பிரிஞ்சு இருக்க முடியாது" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.

"ஒகே, எப்படியோ சம்யுக்தா சீக்கிரம் கல்யாணம் முடிஞ்சா எங்க எல்லோருக்கும் சந்தோஷம் தான்" என சொன்னவன், "ஸிட், எதுக்கு என்னை அர்ஜெண்ட்டா பார்க்கனும் என்று சொன்னே, ஈவ்னிங் வீட்டுக்கு வந்திருக்கலாமே, அமிதாவையும் பார்த்திருக்கலாம்" என சொன்னான்.

"அகில், நேத்து சசிதரனை சந்திச்சேன். அதை பத்தி பேச தான் வந்தேன்" என நேற்று நடந்ததை விவரித்தான்.

"சம்யுக்தாவா?" என கேட்டான் அகிலன்.

"அவன் சம்யுக்தா என்ற பெயரை சொன்னவுடனே அவன் கழுத்தை என் இரண்டு கையாலும் நெரிக்க நினைச்சேன். வந்த கோபத்திற்கு அவனை சுவற்றில் வைச்சு தேய்ச்சிருப்பேன். வெளியே பிரச்சனை செய்ய வேண்டாம் என்று பல்லை கடிச்சு அடக்கிட்டேன்" என சொல்லும் போதே அவனது கண்கள் சிவந்து போனது.

Completed - Marukkathe Nee Marakaathe NeeOpowieści tętniące życiem. Odkryj je teraz