மறக்காதே நீ மறுக்காதே நீ - 31
"நீங்க இந்த ஊரா?" என கேட்டவளிடம், "ஆமாம், பக்கத்தில் சத்தியமங்கலம் இருக்கில்லை, அங்கே வெற்றிவேல்னு ஒரு பெரிய மனுஷன் இருக்கார். நான் அவரோட பேரன்" என சொன்னான்."ஒ, அப்படியா, எனக்கு அவரை தெரியும், ஃபாமிலி ஃபிரண்ட்ஸ், ஆனா நான் உங்களைப் பார்த்ததே இல்லை" என ஆச்சரியத்துடன் சொன்னாள்.
"வாஷிங்கடனில் இருக்கேன்" என நிதானமாக சொன்னான்.
"இங்கே காட்டில் என்ன செய்யறீங்க?" என கேட்டாள்.
"மார்னிங் வாக் வந்தேன்" என அமர்த்தலாக சொன்னான்.
"இங்கே யானைங்க ஜாஸ்தி, ஒத்தை யானைக்கிட்டே மாட்டிக்க போறீங்க" என கண்கள் மின்ன சொன்னாள்.
"ஐ நோ, ஏற்கனவே ஒரு தடவை மாட்டி, தப்பிச்சிருக்கேன்" என சொன்னவன், "யூ லுக் பிரிட்டி" என அவளை கூர்மையாக பார்த்தபடி சொன்னான்.
"உங்க ப்ளு ஐஸ்..." என சொன்னவள், "ரொம்ப அழகாயிருக்கு" சொல்லும் போதே அவளது கன்னங்கள் சிவந்து விட்டன.
"யுவர் ஃபேஸ் இஸ் ஸோ எக்ஸ்பரஸிவ்" என அவன் சொன்னவுடன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள்.
அவளது தடுமாற்றத்தை ரசித்தபடி, "நீங்க எங்கே போறீங்க?" என கேட்டான்.
"சத்தியமங்கலம், நீங்க?" என திருப்பி கேட்டாள்.
அவனது தோளை குலுக்கியவன், "நானும் அங்கே தான் போகணும்" என சிரித்தபடி சொன்னான்.
உதடுகள் விரிய சிரித்தவள், "போகலாம். வாங்க" என பைக்கின் பின் ஸீட்டை பார்த்தாள்.
அவன் ஏறாமல் ஒரு நொடி நிற்க, "என்ன? என் மேலே நம்பிக்கை இல்லையா?" என தலையை சாய்த்துக் கேட்டாள்.
"எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு தான் என் மேலே நம்பிக்கை இருக்கானு தெரியலை..." என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
அவனை கூர்மையாக பார்த்தவள், மெதுவே இதழ் விரித்து சிரித்தபடி, "நம்ப முடியாதவங்களை என் வண்டியில் நான் ஏத்தறது இல்லை" என அழுத்தமாக சொன்னாள்.
VOCÊ ESTÁ LENDO
Completed - Marukkathe Nee Marakaathe Nee
RomanceSudum Nilavu Sudatha Suriyan - Part 2