மார்ச் எட்டு அவளுக்கும் உரிமை தந்தான்;
ஏழு பருவங்களாய் அவளைப் பிரித்தான்;
ஆறுகளுக்கும் அவள் பெயர் வைத்தான்,அதனாலோ
அவற்றையும் கவனிக்க மறந்தான்;
தெய்வமென அவள் சிலையை சித்தரித்தான்;
கொச்சைக்கும் அவளை உச்சரித்தான்;
நீதி தேவதை அவள் என கூறிவைத்தான்;
சதி எனும் சதியில் சிக்க வைத்தான்;
சதவிகிதத்தில் அவள்பாளை குறைத்துவிட்டான்;
பாடல்களில் ஆதிக்கம் கொண்ட பித்தன்;
அவளை வர்ணித்தான் ;
சில சமயம் வைது வஞ்சித்தான் ;
கண்களுக்குத் தெரிந்த பல அவளுக்கு;
பின் இருக்கும் சில அவன்கள் மறுத்தது - உண்மை இன்று சில நல்ல அவன்களால் கிடைத்த -உரிமை;
உரிமை அதை முதல் பெண்ணிற்க்கு தந்த
உண்மை ஆண்மைக்கு என்றும் நன்றி.kayalvizhi007 (08/03/18)
Ulaga Magalir Dhina Nal vaazhthukkal
YOU ARE READING
கவிதை களம்
Poetryமுத்து முத்தாய் பல வார்த்தைகள், தனித்து மின்னும் பல வரிகள். உள்ளம் கவர வருகிறோம், துலைந்து போக வாரீரோ? கவிஞர்கள் பலர் கை கோர்த்து, உங்களுக்கு படைக்கிறோம் பல கவிதைகள். படித்து மகிழுங்கள்...