என் முதலும் நீயாகிட வேண்டும்
என் முடிவும் நீயாகிட வேண்டும்
உன் மழலை புன்னகை ஒன்றில்
உள்ளம் கொள்ளை போனதடா
உன் கள்ளப் பார்வை ஒன்றில்
என் நாணம் பரிபோனதடா
கற்று தெளிந்த புத்தி யாவும்
மழுங்கி கண்ணை மறைத்ததடா
நெஞ்சை கிழித்த காயம் யாவும்
உன் காதல் அழித்ததடா
கள்வனே,
என் வாழ்வில் நீ வேண்டுமடா,
முதலும் நீயாக, முடிவும் நீயாக.
***
Kyra92 (01/04/18)
YOU ARE READING
கவிதை களம்
Poetryமுத்து முத்தாய் பல வார்த்தைகள், தனித்து மின்னும் பல வரிகள். உள்ளம் கவர வருகிறோம், துலைந்து போக வாரீரோ? கவிஞர்கள் பலர் கை கோர்த்து, உங்களுக்கு படைக்கிறோம் பல கவிதைகள். படித்து மகிழுங்கள்...