"ஏய் ஷாக்சி இன்னைக்கு என்னடி ஸ்பெசல் "என்று கேட்ட தன் தோழி திவ்யாவை முறைத்தவள்
"ஏண்டி டெய்லி நான் வீட்ல செஞ்சி கொண்டு வர்ர சாப்பாட்டுல ஆட்டய போடுறியே.உனக்கு கொஞ்சமாச்சும் மனச்சாட்சி வேணாம்?" என்றவளை
"அடி போடி நமக்கு சாப்பாடு என்று வந்தா நியாய அநியாயமே பார்க்க மாட்டோம்.இதுல மனச்சாட்சி வேறயா?ஆமா இன்னைக்கு என்ன மீன் குழம்பா? வாசன ஆளத்தூக்குது.என்னதான் இருந்தாலும் உங்கப்பா வைக்கிற மீன்குழம்பே தனி டேஸ்ட்டி" என்ற தன் தோழியை முறைத்தவள்
"சரி போது போதும் எங்கப்பாக்கு ஐஸ் வெச்சது.பாவம் மனிசன் ஜன்னி வந்தி படுத்திடப்போறாரு"என்ற ஷாக்சியை திவ்யா
"ஹேய் ஷாக்ஸ், உங்கம்மா இப்போ இறந்து ஒரு இரண்டு வருசம் இருக்கும்ல.அப்பாக்கு வேற கல்யாணாம் ஏதும் பார்க்குற ஐடியா இல்லயா?"என்றவளை
"இல்லடி அவரு வேணாம்னு சொல்லிட்டாரு.ஆமா நீ ஏன் இத கேட்குற"என்று சந்தேகமாக கேட்டாள்.
"இல்லடி உங்கப்பா ஓக்கே சொன்னாருன்னா நானே உனக்கு சித்தியா வந்துடலாம்னு யோசிச்சேன்.ஏன்னா உங்க அப்பாவ கட்டிக்கிட்டா சமையல் கட்டு பக்கம் போகவே தேவல்ல பாரு.அப்புறம் உனக்கும் சித்தி கொடுமை எல்லாம் இருக்காது"என்று கூறி இளித்த தன் தோழியின் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் ஷாக்சி.
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கண்ட ரவி இவர்களின் அருகில் வர திவ்யா
"ஓய் ஷாக்ஸ் ,உன் ரோமியோ வர்றாரு,நான் கிளம்பவா? "என்றவளை ஷாக்சி
"சரிடி நீ போ.அவனுக்கு இப்போதான் லீவ் கிடைச்சது போல.இன்னைக்கு டீம் லீட் கூட ஏதோ மீட்டிங்க்னு சொல்லி இருந்தான்.என்னாச்சோ தெரியல.நல்லபடியா முடிஞ்சிருந்தா பையன் ரொமான்ஸ் மூட்ல வருவான்.இல்லன்னா சிடுமூஞ்சியாத்தான் வருவான்.இப்போ என்ன மூட்ல இருக்கான்னே தெரியல.சரி திவ்யா நீ கிளம்பு நான் அப்புறமா கால் பண்றேன்"என்று ஷாக்சி கூற திவ்யா அவ்விடத்தை விட்டு மறைந்தாள்.
YOU ARE READING
நகம் கொண்ட தென்றல்
Non-Fictionநேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும...