தென்றல் 25

3.9K 216 264
                                    

இரவு தூங்க வந்த திவ்யாவிடம் ஷாக்சி

"ஏன் டி உனக்கு தாலின்னா அவ்வளவு இலக்காரமா போச்சா? ஒன்னா தாலிய நீயாவேகட்டிக்கிற, இல்லயா நீயே கழட்ற என்ன டி நினைச்சிக்கிட்டு இருக்க ? " என்று கோபத்தில் பேசியவளை திவ்யா சிரித்துக்கொண்டே

"லூசு உனக்குத்தான் தாலி சென்டிமெட்ன்லாம். எங்க அம்மா பேருவினோதினி. எங்கப்பா பெயர கேட்டியா? " என்றவளை

"சரி அதையும் நீயே சொல்லு" என்று ஷாக்சி காட்டமாக கேட்டாள்.

"அட ஷாக்சி செல்லமே எங்கப்பாரு சார்ல்ஸ். நாங்க க்ரிஸ்டியன்ஸ்டி" என்று கூற ஷாக்சி நிஜமாகவே வாய்விட்டு சிரித்தவள்

"ஹேய் பாவம் டி அர்ஜுன், நீ க்ரிஸ்டியன்னு தெரியாம அவரு கட்டின தாலிய கழட்டி கொடுத்ததும் அவரு முகத்தை பார்க்கனுமே ரொம்ப பாவம் டி. ஆமா நீ என்னதான் ப்ளான் பண்ணிருக்க? உனக்கு அவர பிடிக்கும்னு தெரியும். அவரும்உன்ன நிஜமாத்தான் லவ் பண்றாரு. ஜானவிதான் இப்படி பண்றான்னு நீ அவர தப்பா நினைக்காத" என்று கூற இப்போது திவ்யாவின் கண்கள் கலங்கியதை கண்ட ஷாக்சி

"ஹேய் என்னடா, எதுக்கு நீ இப்போ கண் கலங்குற?" என்று கேட்க

"காலேஜ்ல எவ்வளோ பேரு என் பின்னாடி காதல்னு சுத்தினாங்க. அவங்க எல்லோரையும் ரொம்ப ஈசியா ஹேன்டில் பண்ணேன்டி. ஆனா அர்ஜுன் என்கிட்ட பேசும்போதெல்லாம் என் மனசுக்குள்ள் ஒரு குறுகுறுப்பு வரும். அது எனக்கு ரொம்பபிடிச்சிருந்தது. ஆனா அன்னைக்கு நீ சொன்னேல்ல அவினாஷ் கூட அர்ஜுன் சண்டை போட என்மேல உள்ள காதல்தான் காரணம்னு. அத கேட்டதும் எனக்கு ரொம்ப ஹேப்பியாஇருந்திச்சு. என் மனசுல ஆயிரம் பட்டாம் பூச்சி பறந்த மாதிரி இருந்திச்சு. இதுதான் காதல்னு அப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா என் காதல் பாதியிலேயே முடிஞ்சிடும்னு நினைக்கலடி" என்று அழுதவளை என்ன கூறுவதென்று தெரியாமல் ஷாக்சி அணைத்துக்கொண்டு

"ஹேய் திவ்யா என்ன உளர்ர ? அர்ஜுன் உன்ன லவ் பண்றதுக்கும் ஜானவி இப்படி நடந்திக்கிறதுக்கும் சம்பந்தமில்லடி. சும்மா உன் மனச போட்டு குழப்பிக்காத. முதல்ல அர்ஜுன் கிட்ட பேசு. பேசினாத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும்" என்றவளை திவ்யா ஒரு உலர்ந்த புன்னகையுடன்

நகம் கொண்ட தென்றல்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin