தென்றல் 16

3.8K 210 111
                                    

"நீங்க எனக்கு மித்ரன கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க " என்று ஜானவி கூறியதில் எல்லோரும் அதிர்ச்சியாக முதலில் சுதாகரித்த விஷ்வனாத்

"என்னம்மா சொல்ர, நானே அவன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெடு கொடுத்திருந்தேன்.அதுக்கு ஏதேதோ ப்ளான்லாம் போட்டு இதோ இந்த பெரிய மனுசி ஷாக்சியும் ,அவனும் சேர்ந்து ஏதோ ப்ளான் பண்ண அத என்னோட பொண்ணு என்கிட்ட போட்டு கொடுத்துட்டா" என்று கூற ஷாக்சி இப்போது திவ்யாவை முறைத்துக்கொண்டு இருந்தால்.இதைக்கண்ட விஷ்வனாத்

"அட நீ ஏன்மா அவள முறைக்கிற.நீங்க இரண்டு பேரும் பண்ண காரியத்துக்கு நாந்தான் உங்கள முறைக்கனும்.சரி உன்ன பத்தி விசாரிச்சதுல நீ நல்ல பொண்ணுன்னு எல்லோருமே சொன்னாங்க.அதுவும் நீ என் பொண்ணோட ப்ரெண்டா.சோ என் பொண்ணோட சாய்ஸ் எப்போமே தப்பாகாது.அதான் உங்க ரெண்டு பேருக்கும் முதல்ல கல்யாணம் பண்ணி ஒரு அதுக்கு அப்புறமா இன்னொரு கண்டிஷன போட்டு ஒரு ட்விஸ்ட் வைக்கலாம்னு பார்த்தேன்.அதுக்கிடையில இப்படி ஆகிடிச்சி.அம்மாடி ஜானவி நீ சொல்ரது சரி பட்டு வராதுமா.அதுவும் மித்ரன் இதுக்கு ஒத்து வரமாட்டான்"என்று கூற புன்னகை மாறாமல் கேட்டுகொண்டிருந்த ஜானவி

"அங்கிள் மித்ரனுக்கு ஆல்ரெடி என் மேல லவ் வந்திடிச்சி"என்று கூற மூவரும் அதிர்ச்சியாக ஜானவியை பார்க்க திவ்யாவோ

"இது எப்போ நடந்திச்சு.என்கிட்ட கூட நீ சொல்லலயே" என்று கேள்வியாக கேட்க ஜானவி

"உங்க எல்லோருக்கும் தெரியும்ல மித்ரனுக்கு டெய்லி ஆபீஸ்கு பொக்கே வாரது.அத நாந்தான் அனுப்பினேன்.உங்க ஆபீஸ்ல உள்ள ஒருத்தர் மூலமா அந்த பொக்கே வர்ரதினால மித்ரனோட நடவடிக்கைகள் எப்படி இருக்குன்னு கண்கானிச்சேன்.ஆரம்பத்துல அத வெறுப்பா பார்த்தாலும் போகப்போக அவருக்கு அந்த பொக்கே அனுப்புற கண்ணுக்கு தெறியாத அந்த பொண்ணு மேல ஒரு ஈர்ப்பு வந்திடிச்சி.சில நாட்கள் வேணும்னே நான் பொக்கே அனுப்பாம விட்டா அவரு அந்த நாள் பூரா மூடவுட்டா இருந்ததையும் கண்டுகிட்டேன்.அத அவரு ஈர்ப்புனு நினைச்சிகிட்டு இருக்காரு .அது ஈர்ப்ப இல்ல காதல்னு அவருக்கு எப்படி புரியவைக்கனும்னு எனக்கு தெரியும்.சோ நீங்க யாரும் மித்ரன பத்தி கவலப்பட வேண்டாம்"என்றவளை திவ்யா

நகம் கொண்ட தென்றல்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin