தென்றல் 12

4.4K 206 111
                                    

"ஹல்லோ சார், நீங்க எப்படி இங்க, ஒரே சர்ப்ரைஸா இருக்கு" என்றவளை அவன்

"அய்யோ அக்கா, ஏன் இப்படி சார்னு சொல்ரீங்க.கால் மை நேம் ,இல்லைன்னா அழகு தமிழ்ழ தம்பின்னு சொல்லுங்க"என்றவனை முறைத்தவள்

"உங்க பெயரு மறந்துடிச்சி, ஆமா உங்க பெயரு என்ன?"என்று கேட்க நிஜமாகவே ஒரு கணம் அவன் கண்களில் ஒரு வலி தோன்றியதை கண்ட திவ்யா இதுக்குமேலும் அவனிடம் விளையாடாமல் இருக்க எண்ணி

"ஹேய் சாரி அர்ஜுன்.அன்னைக்கு ஹாஸ்ப்பிடல்ல உங்க கிட்டபேசினதுக்கு அப்புறம் 2 வாட்டி கால் பண்ணி பேசினதோட சரி.எனக்கு டைம்மே கிடைக்கல.சும்மா உங்கள கலாய்ச்சேன்"என்றவளை

"நல்லா கலாய்ச்சிங்க திவ்யா.நான் வேற உங்களுக்கு ஏதும் அம்னீசியாவோன்னு நினைச்சிட்டேன். இல்லன்னா முதல்ல இருந்து இல்ல எல்லாம் ஆரம்பிக்கனும் "என்று புன்னகைக்க இருவரும் சேர்ந்து அவர்களின் பிக்னிக்கிற்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினர்.

இந்த நாட்களில் மித்ரனுக்கு வருகின்ற பொக்கோ மட்டும் நாள் தவறாமல் அவனது மேசைக்கு கூரியரில் வந்து கொண்டே இருந்தது.ஆரம்பத்தில் கொஞ்சம் எரிச்சலுற்றவனாக இருந்தாலும் போகப் போக யாராக இருக்கும் என்ற ஆவள் அவன் மனதை கொஞ்சம் அந்த பெண்ணுக்காக ஏங்க வைத்தது.

இரண்டு நாட்களின் பின் மித்ரன் ஷாக்சியிடம் வந்து

" ஷாக்சி உன் அக்கவுன்டுக்கு நான் 15 லட்சம் போட்டிருக்கேன்.மீதிய அடுத்த வாரம் போடுறேன்" என்றவனை அவள்

" மித்ரன் திடீரென இப்படி 15 லட்சம் எடுத்தா அப்பா எதுக்குனு கேட்கமாட்டாங்களா?" என்று கேள்வியுடன் நிற்க அவனோ சாதாரணமாக

" அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல ஷாக்சி.சின்ன வயசில இருந்தே அப்பா என்னோட அக்கவுன்ட்கு மன்த்லி பணம்
டெபாசிட் ஆகுற மாதிரி அர்ரேஞ்ச் பண்ணிருக்காரு.இப்போ அது ஒரு 25 லட்சம் தேறும்.அதான் மொத்தமா எடுக்காம கொஞ்சம் கொஞ்சமா எடுக்க போறேன்.அப்புறம் அப்பா இப்படி ஒரு மேட்டர் இருக்குறதையே மறந்திருப்பாரு" என்று கூற ஷாக்சி கொஞ்சம் கவலையுடன்

நகம் கொண்ட தென்றல்Where stories live. Discover now