💞பகுதி-16💞

2.2K 74 42
                                    

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அஞ்சலி மற்றும் கதிருக்காக காத்திருந்த நண்பர்கள் க்ரிஷ் பேசத் துவங்கியதும் அவன் கூற வரும் விஷியச்தில் தங்கள் கவனத்தை செலுத்தினர்

சரியாக க்ரிஷ் பேசத் துவங்கிய நேரம் இருவரும் கல்லூரியினுல் வந்து சேர்ந்தனர்.

க்ரிஷ் பேசுவதைக் கேட்டு அஞ்சலி மனதிற்குள்..."அட கடவுளே...சும்மாவே இந்த மனுஷ குரங்கு எங்கள காலேஜ்க்க வெளில விடாது...இதுல இந்த சேர்மேன் வேற பயங்கரமான விஷியத்தப் பற்றி எல்லாம் பேசுறானே... சுத்தம்...இனிமேல் காலேஜீக்குள்ள இருந்த சுதந்திரமும் போகப் போகுது...ஹிம்"என நினைத்து பெரு மூச்சொன்றை விட்டு கொண்டாள்

அஞ்சலி மற்றும் கதிரை பார்த்த சத்யா, இருவரையும் அழைத்துக் கொண்டு கல்லூரி பூங்காவிற்கு சென்றால்

சத்யா..."ஹே...போன விஷியம் என்ன ஆச்சு...ஸ்கூட்டி கிடைச்சுதா....அந்த இண்ஸ்பெக்டர் ஏதும் பிரச்சனை செய்தாரா..."என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போன சத்யாவிடம்

கதிர்..."ஏய்... ஸ்பீக்கர் டப்பா...கொஞ்சம் அடங்குறியா...சும்மா லொட லொடனு கேள்வி கேட்டுட்டே இருக்க...உனக்கு வேற வேலையே இல்லையா...எப்ப பாரு கதிர் அஞ்சலினு பின்னாடியே சுத்திகிட்டு இருக்க..."என்று அஞ்சலி மீதிருத்த கோவத்தை சத்யா மீது காட்ட துவஙகினான் கதிர்

அதற்கு சத்யா..."ஹே கதிர்...போன காரியம் என்ன ஆச்சுன்னு தெரித்து கொள்ள தான் கேட்டேன் ...நீங்க போய் வர லேட் ஆச்சா அதான் ஏதும் பிரட்சனை ஆச்சான்னு கேட்க தான் வந்தேன்....நீ இப்படி டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒன்னும் இல்ல.."என்க

கதிர்..."நாங்க போன காரியம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற.."

இதனைக் கேட்ட அஞ்சலி..."ஹே...கதிர் என்ன ஆச்சு உனக்கு...சும்மா சம்பந்தமே இல்லாமல் பேசிட்டு இருக்க..."என்று கதிரை கடிந்து கொண்டு சத்யாவிடம் திரும்பி..."ஸாரி சத்யா...அவன் என் மேல இருக்க கோபத்த உன் மேல காட்டிட்டான்...நீ அத சீரியசாக எடுத்துக்காத சரியா..."என்றால் அஞ்சலி..

💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖Où les histoires vivent. Découvrez maintenant