கண்களின் ஓர பார்வையில்
என்னை
கடத்தி சென்றதும் நீயே....இன்று என் உயிர் உனக்காக
துடிப்பதை மறந்து
எனை கடந்து செல்வதும் நீயே..உன் காதல் வரிகளால் என்மீது கொண்டுள்ள காதல்
கண்டு மெய்சிலிர்த்தது உன்னாலே..நீ சொன்ன வரிகளில் உயிரில்லை
என அறிந்து
இன்று மெய்மறந்து உன்னாலே...வரிகளில் இருந்த உண்மை
எல்லாம் உன்
வாய்மொழியினால் பொய்யானதே....ஆசை கொண்ட நெஞ்சம் வெறுத்த போதிலும் அன்பெனும்
தீபம் உன் நினைவுகளோடு சுடர்
விட்டு எரிகிறதே ...நீ சொன்ன வரிகளை மதியில்
இன்றி மனதினால்
சுமந்ததனால் இன்று மரணம் வரை வார்த்தையிலே வாழ வரம் கொடுத்து சென்றுவிட்டாயே........
YOU ARE READING
கல்லறையிலும் உன் நினைவுகளுடன்
Poetryகாதலின் வலி... காதலிப்பவர்களுக்கு மட்டும் இல்லை உண்மையாக நேசிக்கும் அணைத்து உயிர்களிடத்திலும் உண்டு... நட்பு, உறவு, காதல்... பூத்த மலர்கள் அனைத்தும் மாலையாவது இல்லை ஆனால் மலர்களின் வாசம் மாறுவதில்லை... அது போல தான் ஒருவர் மீது கொள்ளும் நேசமும்.... ந...