மனம்

54 14 60
                                    

என் சோகம் என் கவிதை மட்டும் தான் சரியாக கனிக்குமோ கண்ணீர் வரும் முன்னே கவலையின் கவிதை வந்து விடுகிறது..

உன்மீது வைத்த பாசம் என்னையே மறக்கடித்து உன் நினைவுகளை உறைய வைத்து விட்டது மனதை உயிரோடு கொல்கிறது..

கனவுகளில் வாழ்கிறேனா இல்லை கனவோடு வாழ்கிறேனா தெரியவில்லை ஆனால் எதுவாயினும் உன் நினைவோடு மட்டும் தான்..

என் உயிர் கொண்டு உனை நேசித்தது என் தவறா இல்லை என் உயிருக்குள் உனை மட்டும் வைத்து பூட்ட நினைத்தது தவறா....

இதயத்தில் அழகாய் உறைந்த உன் நினைவு ஏனோ கண்களில் மட்டும் உருகும் பனிபோல் கசிந்து கொண்டே இருக்கிறது...

உன் வாசல் தேடி வரும் போதெல்லாம் நானே வருகிறேன் எனை தொந்தரவு செய்யாதே என கூறிவிட்டாய்...

நாளை நீ தேடி வரும் போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் அல்லவா இருப்பேன் நீ அழைத்தாலும் ஒலிக்காதே.......

கல்லறையில் உறங்கும் போதும் கவி சிந்துவேன் என் மனதில் நினைத்த உனக்காக சிறிதளவும் கலங்கிவிடாதே... ...

கல்லறையிலும் உன்  நினைவுகளுடன் Where stories live. Discover now