பகல் முழுதும் இரவாக வேண்டும் அதில் மொத்தமும் உன் நினைவோடு கடக்க வேண்டும் ..
உன்னோடு வாழும் அழகான நேரம் என் கனவு தானே அது இமை பொழுதும் குறையாமல் என் நினைவோடு வேண்டும்...
இதுவரை நீ கொடுத்ததிலே எனக்கான சிறந்த பரிசு என் இதயத்தில் நெருஞ்சி முள்ளாய் குத்தும் உன் நினைவுகள் தான்...
என்னை பிரிந்து மட்டும் அல்ல மறந்தும் கூட உன்னால் வாழ முடியுமென நான் தான் இதுநாள் வரை அறியாமல் போனேன்....
ஆனால் மறந்து அல்ல ஒரு நொடியும் உனை பிரிந்து கூட என்னால் வாழ முடியாதென நீ நன்கு அறிவாயே பின் ஏன் அந்த வேதனை கொடுத்து சென்றாய்..
என் வாழ்க்கையில் அழகான வானவில்லாய் எனக்குள் வந்து மகிழ வைத்து நான் முழுதாய் வர்ணிக்கும் முன்பே என்னை மறைந்து சென்றதின் காரணம் தான் என்னவோ... ..
உயிரற்ற உடல்களை புதைத்து வைத்தால் மட்டும் தான் கல்லறை என நினைத்திருந்தேன்... . .
உயிருள்ள உன் நினைவுகளை என் ஆழ்மனதில் புதைத்து உள்ளேனே என் இதயம் கூட இன்று கல்லறை தான் என உணர்த்திசென்றாயே. .
YOU ARE READING
கல்லறையிலும் உன் நினைவுகளுடன்
Poetryகாதலின் வலி... காதலிப்பவர்களுக்கு மட்டும் இல்லை உண்மையாக நேசிக்கும் அணைத்து உயிர்களிடத்திலும் உண்டு... நட்பு, உறவு, காதல்... பூத்த மலர்கள் அனைத்தும் மாலையாவது இல்லை ஆனால் மலர்களின் வாசம் மாறுவதில்லை... அது போல தான் ஒருவர் மீது கொள்ளும் நேசமும்.... ந...