என் மனதின் வலி அறிந்து எனை அணைத்து ஆறுதல் படுத்துவது நீயே....
இன்று கண்ணீர் துளிர்கிறது அதை துடைத்திட உனக்கு நேரமில்லையே..
தனிமை தான் உற்ற துணையாகும் என புரிய வைத்தது நீயே...
நீளும் இரவில் நினைவு கூட கலங்கடிக்கும் என உணர வைத்தது நீயே....
அழகான தருணத்தை ஒப்பிட்டு அதை நினைத்து ஏங்கி தவிக்கலாம் என உணர்த்தியது நீயே...
இதயம் இருமடங்காக துடிக்கிறது உனக்காக
உணராமல் எனை நீங்கி சென்றதும் நீயே..சிலநேரம் வலிகளுக்கு தாய்மடி தனிமை
தான் இனிமை என அதை அனுபவிக்க வைத்தது நீயே...இன்று புரிகிறது கல்லறைக்கு தனியாக தான் செல்லவேண்டும் என தானே எனக்கு புரியவைக்க செய்கிறாய் புரிந்துகொண்டேன் தனிமை நேசிக்க....
நீ கொடுத்த தனிமையின் ஊற்று தானே எனை கவிஞனாக உணர செய்த கவிதைகள்.. இனி விரும்பி ஏற்கிறேன் உனக்காக....
YOU ARE READING
கல்லறையிலும் உன் நினைவுகளுடன்
Poetryகாதலின் வலி... காதலிப்பவர்களுக்கு மட்டும் இல்லை உண்மையாக நேசிக்கும் அணைத்து உயிர்களிடத்திலும் உண்டு... நட்பு, உறவு, காதல்... பூத்த மலர்கள் அனைத்தும் மாலையாவது இல்லை ஆனால் மலர்களின் வாசம் மாறுவதில்லை... அது போல தான் ஒருவர் மீது கொள்ளும் நேசமும்.... ந...