வாய் தவறி நீ சொல்லிய
ஒரு வார்த்தை போதும்
என் வாழ்நாள் முழுதும்
துடிதுடித்து சாக....இறப்பை விட கொடுமை
உயிருக்கு உயிராய்
நேசித்த உறவை பிரிவது...அதுவும் சுகம் தான்
என்னிடம் உரிமையாய்
உன் ஆசை சொல்லத்
தோன்றியதால்.....பிரிய சொல்லிவிட்டாய்
உள்ளம் எரிந்து போகிறதே
இது உண்மைதானா என
யோசிக்கையில் உயிர் போகாதா.....ஆனால் என்ன உனை பிரிய
சொன்னதற்கு முழுதாய்
என்னை எரிய சொல்லிருக்கலாம்
உன் முன்னே சாம்பலாகிருப்பேன்.....ஆயிரம் ஆறுதல் மொழி
சொல்லிக் கொண்டாலும்
மன தேற வழி இல்லையே
உன் வார்த்தை ஒன்றை தவிர.... .உன்மீது கொண்ட நேசம்
இனி என் நினைவோடு
மட்டும் தான் என்பதை ஏற்க
மறுக்கிறதே என் நெஞ்சம்..இன்று உனை தேடி வருகிறேன்
எனை விலகி செல்கிறாய்
அதே போல் இருந்துவிடு நாளை என் கல்லறைக்கு வந்து உன் கண்ணீர் சிந்திவிடாதே அதை காணும் சக்தி எனக்கில்லை என் இறப்பிலும்...
YOU ARE READING
கல்லறையிலும் உன் நினைவுகளுடன்
Poetryகாதலின் வலி... காதலிப்பவர்களுக்கு மட்டும் இல்லை உண்மையாக நேசிக்கும் அணைத்து உயிர்களிடத்திலும் உண்டு... நட்பு, உறவு, காதல்... பூத்த மலர்கள் அனைத்தும் மாலையாவது இல்லை ஆனால் மலர்களின் வாசம் மாறுவதில்லை... அது போல தான் ஒருவர் மீது கொள்ளும் நேசமும்.... ந...