💞வரம் 12💞

4.5K 188 11
                                    


கெளதம் ஸ்டேஷனில் இருந்து போன் வந்ததால் பேசி விட்டுதான் கிளப்பினான்.., அதனால் பிரியா முன்னே சென்று விட பிரியாவை தொடர்ந்தவர்கள் கௌதம் கிளம்பிவிட்டான் என நினைத்து தான் பிரியாவை கொல்ல முயன்றார்கள்......

ஆனால் பிரியாவின் வண்டியை இடித்த உடன் தான் கெளதம் வண்டியை பார்த்தனர்..... இப்போது அவளை நெருங்கினால் கெளதமிடம் மாட்டிக்கொள்ளவர்கள் என்று அவர்கள் விட்டால் போதும் என ஓடி விட்டனர்.......

பின்னாடியே வந்த கௌதம் பிரியா கீழே விழுந்ததை பார்த்தவுடன் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை..... காரில் இருந்து இறங்கி வந்து அவளிடம் "என்ன மேடம், அங்க என்ன? புதையலை தேடிட்டு இருக்கீங்க? "என்றான் ஒரு வித நமட்டு சிரிப்புடன்....

அவள் அவனை முறைத்துவிட்டு "என்னை பார்த்தா, புதையல் தேடுறவ மாதிரி தெரியுதா"?? என்றவள் "கொஞ்சம் கைய குடுக்கறது.... ஒருத்தி விழுந்துகிடக்கறாளே.... அவளை தூக்குவோம்னு இல்லாம வெட்டி பேச்சு பேசிட்டு இருக்க"?????என்றாள்.... அவள் சொன்னதும் அவள் எழ கை குடுத்தவன்...." உனக்குக்கெல்லாம் எவன் போலீஸ் வேலை குடுத்தது "....... என்றதும் குடுத்த கையை இழுத்துக்கொண்டான்..... அவன் கையை பிடித்து எழ போனவள் அவன் கையை எடுத்ததும் மறுபடியும்கீழே விழுந்தாள்.....

"ராட்சசன் , பிசாசு ஏண்டா கையை எடுத்த......??? முன்ன விழுந்தப்பகூட அடி படல ..... ஐயோ !இப்போ என்னால எந்திருக்கவே முடியலையே, ... ராட்சசன் என்னோட இடுப்பை உடைச்சிட்டான், ஐயோ! "என்று கத்தினாள் ..... "இப்போ நான் எப்படி வீட்டுக்கு போவேன் ..... எனக்கு தெரியாது, நீதான் என்னை வீட்டுல கொண்டுபோய் விடணும் "என்றாள்

"அதுலாம் முடியாது, எனக்கு ஒரு அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு நான் போகணும் உனக்கு சேவகம் பண்ணலாம், என்னால முடியாது ஒரு ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு போ."....

"ஐயோ !அம்மா என்னால எந்திரிக்கவே முடியலையே ... போலீஸ் உங்க நண்பன் சொல்றதுலாம் பொய்யா? ....சின்ன ஹெல்ப் கூட பண்ணாம இப்படி ஒரு வயசு பொண்ண தன்ன தனியா விட்டுட்டு போறானே"??????

💞வரமாக   வந்தவளோ  💞Donde viven las historias. Descúbrelo ahora