♥️வரம் 57♥️

4.4K 167 71
                                    

கௌதம் வீட்டில் உள்ளவர்களை சமாதானம் செய்ய மிகவும் கஷ்டபட்டான்.... அதை வேடிக்கை பார்த்து சந்தோசபட்டாள் நம்ப பிரியா

ஒருவாறு அனைவரது வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பியது.... கௌதம் பிரியாவை தாங்கு தாங்கு என்று தாங்கினான்....

ஒரு மாதம் போனதும் பிரியா ஒரு நாள் மயங்கி விழ பதறிய செல்வி உடனே கௌதமிற்கு அழைத்து சொல்லிவிட்டார்...

அவளுக்கு என்னவோ என்று பதட்டதுடன் வந்தவன்....என்ன குட்டி ஆச்சி... உடம்புக்கு முடியலையா வா ஹாஸ்பிடல் போலாம் என்றான்...

நல்லா கேளுடா மயங்கி விழுந்துட்டாளேனு பதறி அடிச்சிட்டு உனக்கு போன் பண்ன்னேன்... இவளை எழுப்பி எவ்வளவு நேரம் கேட்டுடேன் கொஞ்சம் கூட வாயை திறக்கவே மாட்டிங்கறா... என்றார் செல்வி ஆதங்கத்துடன்

சரி நீ பயப்படாதம்மா நான் பார்த்துக்கறேன் என்றான் பிரியாவை தூக்கிகிட்டு காருக்கு போக அவளோ ரூமிற்கு போ என்றாள்

எதுக்கு குட்டி ரூமுக்கு. முதல ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாம்..

நீ போடா மாமா சொல்றேன் என்றவளை பார்த்தும் அவனுக்கு குழப்பம் தீரவில்லை... அவள் சொன்னது போலவே ரூமிற்கு போக... அவளை பெட்டில் இறக்கிவிட்டான்

அவள் எழுந்து அவனை கட்டிகொண்டவள் மாமா... என்றாள்

என்ன பண்ணுது குட்டி

அதுலா ஒன்னும் பண்ணல... மாமா...நான் உனக்கு குட்டியா... m

என்னடி லூசு மாதிரி பேசிட்டு இருக்க.... அப்படிதானே உன்ன கூப்பிடுவேன் இப்போ என்ன புதுசா கேக்கற

நான் உனக்கு குட்டி மாதிரி.... நமக்கு ஒரு குட்டி வர போதுடா...நாள் தள்ளி போயிருக்கு . என்றாள் வெக்கத்துடன்

முதலில் புரியாதவன் பிறகு புரிந்ததும் துள்ளிகுதித்து அவளையும் தூக்கி சுத்தினான்...

ஏய் மாம்ஸ் என்ன பண்ற இறக்கிவிடுடா எனக்கு மறுபடியும் மயக்கம் வந்துரும் போல என்றதும் தான் இறக்கிவிட்டான்...

💞வரமாக   வந்தவளோ  💞Donde viven las historias. Descúbrelo ahora