தீயாய் சுடும் என் நிலவு 41

1.7K 68 4
                                    

'என்னது இது?' என்று நினைத்துக்கொண்டே அதில் இருந்தவற்றை பிரித்து பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான்.

"என்ன தீரன் இது? எப்படி நமக்கு தெரியாம போச்சு?" என்று எழுந்தே விட்டான்.

"உட்காருங்க அமுதன். ஸ்ரீ நீயும் பாரு" என்று அவளை பார்த்தான்.

சரியென்று தலையசைத்து விட்டு எடுத்து பார்த்தவளும் அதிர்ந்து போனாள்.

"மாமா" என்று பார்க்க வேதனை புன்னகை ஒன்றை உதிர்த்தவன் மீண்டும் வேறு ஒரு பைலை எடுத்து நீட்டி.

"இதைவிட சுவாரசியமான விஷயம் ஒன்னு இருக்கு. பார்க்குறிங்களா?" என்று அங்கிருந்த மேசையின் மேல் வைத்தான்.

நடுங்கும் கரத்தோடு மேலும் குழப்பத்துடன் அந்த பைலை எடுத்து பார்த்தவன் விழிகள் அதில் நிலைகுத்தி நின்றன.

"தீரன் இது..? " என்று அதிர்ச்சியாய் விழிகளில் நீர் ஊற்றெடுக்க  அவனை நோக்கினான்.

"100% உண்மை. நல்லா விசாரிச்சுட்டேன்." என்றான் தீரனும் கலங்கி.

"எப்படி நாம எல்லோருமே கூட தானே இருக்கோம். நமக்கு எப்படி தெரியாம போனது." என்றான் இரு கரங்களிலும் முகத்தை பதிந்து கொண்டு.

"அமுதா" என்று பதறியபடி அவன் தோளில் கரம் வைத்து, "என்னாச்சு அமுதா? அதுல என்ன இருக்கு?"  என்றாள் ஸ்ரீஷா.

சிலநொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவன் நிமிர்ந்து அவளை நோக்கி, "ஹ்ம்! உங்க அக்காவோட மரணஓலை" என்றான் விழிகளில் கோபம் தெறிக்க

"என்ன சொல்றிங்க? அக்காக்கு என்ன? " என்று அவனருகில் இருந்த பைலை எடுத்து பார்த்வள்,

"மாமா! " என்று அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்.

"எனக்கும் அப்படி தான் இருந்துச்சு ஸ்ரீ. உங்க அக்கா என்னை வேலை செஞ்சுருக்கா பார்த்தியா?" என்றான் விழிகளில் நீரோடு.

"இப்பயே போய் ரெண்டு அரை பளார் கண்ணத்துல கொடுக்கணும் போல இருக்கு. ஆனா நமக்கு தெரிஞ்சிருச்சுன்னு அவளுக்கு தெரிஞ்சுதுன்னா நிச்சயமா யோசிக்காம யாருக்கும் சொல்லாம இங்கிருந்து கிளம்பிடுவா" என்றான் தீரன்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)حيث تعيش القصص. اكتشف الآن