🧡💙🧡 காதலை💞 தேடி...🧡💙🧡
K💞M Part -18
""ஹலோ!! கதிர் பேசுறேன்... ""
அவன் குரல் கேட்டதும்... தொண்டை அடைத்தது முல்லை💞க்கு..
சிரமப்பட்டு... நான் முல்ல💞 பேசுறேன்... எப்டி? இருக்கீங்க...என்றாள்
ம்ம்ம்... நீங்க...?
ஆஹான் இருக்கேன்...
ஊர்ல இருந்து எப்போ வந்தீங்க..காலையில தான் வந்தேன்..
வீடு பிடிச்சிருக்கா..?பிடிச்சிருக்கு.. ரொம்ப Thanks...
எதுக்கு..?
உங்க தங்கை மூலமா வீடு ஏற்பாடு பண்ணி தந்தது..க்கு
பரவாயில்லைங்க...
அப்புறம் வேறென்ன? விஷேசம்...
நான் சொல்லணுமா..? நீங்க சொல்லணுமா ....?
என்ன? சொல்றீங்க...
Congratulations கதிர்...
எதுக்கு..?
தெரியாத மாதிரி கேக்குறீங்க...
உங்க தங்கை எல்லாத்தையும் சொல்லிட்டா.. ஸ்வேதா போட்டோவையும் காமிச்சுட்டா... அதான் வாழ்த்துக்கள் சொன்னேன்...துடிக்கும் இதயத்துடன் அவன் பதிலுக்காக காத்திருந்தாள்...
அ...து வந்து...
ஏன்..?முன்கூட்டியே என் கிட்ட சொல்லல..
நீங்க கூட தான் சொல்லல வரன் பாக்குறாராமே உங்க அப்பா...
அதுக்குள்ள சொல்லிட்டாளா காயத்ரி...
ம்ம்ம்...
இரண்டு பேருமே சில வினாடிகள் மௌனமாக இருந்தனர்..
இன்னைக்கு Night எங்க வீட்ல Dinner சாப்பிடலாம் மறுக்க கூடாது.... வர்றீங்களா.? கதிர்..
உங்க வீட்லயா...?
ஆமா....
அம்மா அப்பா உங்கள பாக்கணும்னு சொன்னாங்க..
உங்க அப்பா வந்தாச்சா..?
காலையில தான் வந்தாரு...
என்ன வர்றீங்களா..?சும்மா அவங்கள பாக்க வரேன்.. எதுக்கு Dinner எல்லாம்...
புதுமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க வேணாமா..?