💜🤍💜 காதலை💞 தேடி..💜🤍💜
K💞M Part - 21
என்னை நியாபகம்
வச்சிருப்பிங்களா???
இல்ல.....மறந்துடுவீங்களா?? என்று முல்லை💞 கேட்டதும்......அதுவரை இயல்பாக பேசுவதாக சிரமப்பட்டு காட்டி கொண்டதை மீறி இருவருக்கும் கண்ணீர் வழிந்தது...
சில நொடிகள் இருபக்கமும் அமைதி நிலவ...
மிகவும் சிரமப்பட்டு... உதட்டில் கசப்பான புன்னகையை கொண்டு வந்து...
என்னங்க முல்ல💞 இப்டி கேக்குறீங்க.... இடமும் சூழ்நிலையும் தான் மாறுமே ஒழிய, மனசு எப்டி மாறும்...நட்பு எப்படி மாறும்....
நீங்க தான் என்னை மறக்க வாய்ப்பிருக்கு.. என்றான் கதிர்...ஏன்?? அப்டி சொல்றிங்க...
கல்யாணம் ஆனா புது கடமைகள், பொறுப்புகள் நிறைய வந்துடும்... நேரம் காணாமல் போய்டும்... என் அக்கா கூட Marriage ஆகி போனதும்.. நினைச்சப்போ எங்கள வந்து பாக்க முடியல..
என்னை அந்த List ல சேக்காதீங்க கதிர்.. நான் மனிதர்களையும் அன்பையும் ரொம்ப மதிக்கிறவ.
நீங்க அமெரிக்கா போனதும் உங்க அட்ரஸ், இமெயில், போன் நம்பர் எல்லாம் எனக்கு Send பண்ணுங்க...
I Will Always Keep in Touch With You...அமெரிக்கா ல எங்கே??
கலிஃபோர்னியா பக்கத்துல.....
ஒரு சிட்டி...இன்னும் பேரு என் வாயிலயே நுழையல..ஆமா... உங்கள பொண்ணு பாக்க எப்போ வர்றாங்க...
இன்னும் அரைமணி நேரத்துல...
மிஸ்டர் கவின் ரொம்ப நல்ல Type.. விசாரிச்ச வரைக்கும் எல்லாரும் ரொம்ப நல்ல விதமா சொல்றாங்க...
ம்ம்ம்...
சட்டென்று உரையாடல் நின்று போய் இரண்டு பக்கமும் மௌனத்திரை விழுந்தது...
அப்புறம் என்றான்..
நீங்க தான் சொல்லணும்....
நான் போற ஏரியாவுல மக்கள் டிவி வருமானு தெரியல.... காயத்ரிய உங்க ப்ரோக்ராம் எல்லாம் ரெகார்ட் பண்ண சொல்லியிருக்கேன்...