💚❤️💚 காதலை💞 தேடி...💚❤️💚
K💞M Part - 19
இந்த தெரு தான் ப்பா.. கொஞ்சம் வண்டிய நிறுத்திக்க ...என்று ஆட்டோவை நிறுத்தினார் முருகன்...
15 ம் எண் வீட்டை தேடி கண்டுபிடித்தார்... வாசலில் வண்டியில் iron செய்து கொண்டிருந்தவரை அணுகினார்...
ஏன்பா.. இந்த வீட்ல தானே கவின் னு.. ஒரு Chemical Engineer தங்கியிருக்காரு...
ஆமாம் Sir... ஆபீஸ் ல இருந்து வந்துட்டாரு போய் பாருங்க... அவருக்கு சொந்தமா??
ஒரு வகையில் ஆமாம்... உனக்கு அவர பத்தி தெரியுமா...?
தெரியும் Sir....
இங்க வந்து ஒரு 6-7 மாசம் இருக்கும்.. என்கிட்ட தான் இஸ்திரிக்கு துணி கொடுப்பாரு...எதுக்கு கேக்குறீங்க...?சொல்றேன்..
அவர் குணம் எப்படிப்பா...?
நல்ல பையன் தான்...ரொம்ப அமைதி..அரட்டை அடிக்கிற ஆளு இல்லை.. ஆபீஸ் விட்டு வந்தா எங்கேயும் போக மாட்டாரு...
இந்த காலத்துல எந்த கெட்ட பழக்கமும் இல்ல..னா பாத்துக்கோங்களேன்.. அவ்ளோ தங்கமான பையன் Sir.. என்ன..? விஷயம்னு நீங்க சொல்லலையே..!!
அவரோட ஒரு Business Dealing வச்சிக்க போறேன்...
அதான் சும்மா விசாரிச்சேன்..
நீ வேலைய பாரு....என்று கேட்டை திறந்து... மாடி படி வழியே அந்த வீட்டை அடைந்து... காலிங் பெல்லை அழுத்தினார்....
வினாடிகளில் கதவை திறந்த கவின்.. கேள்வி குறியுடன்... பார்த்து யார் Sir வேணும்... என்றான்.
இங்க மிஸ்டர் கவின்...!!
நான் தான்...
என் பேரு முருகன்..
மக்கள் டிவி யில Work பண்ற
முல்லை 💞யோட அப்பா...பேப்பர் Add பாத்துட்டு நீங்க Apply பண்ணி இருந்தீங்க... அது சம்மந்தமா உங்கள பாத்து பேசிட்டு போலாம்னு வந்தேன்..
வாங்க Sir... உள்ளே வாங்க...
பரபரப்புடன்.. நாற்காலியை நகர்த்தி போட்டு.. என்ன Sir சாப்புடறீங்க... Cool Drinks இல்ல Coffee.. என்றான்..