இது தங்கள் வீடு தானா என்ற சந்தேகம் கணவன், மனைவி முன்பு, பெரிய கேள்விக்குறியாக கண் முன்னே நின்றது.
வந்தார்கள் வென்றார்கள் என்பது போல், வந்தார்கள் அன்னையும் மகனும். வீட்டையே தங்கள் பொறுப்பில் எடுத்து அவர்கள் வசமாக்கிக் கொண்டனர். மாறன் காபி எடுத்து வர, மதி மற்றும் சித்தார்த் அதனை பருகும் வரை அமைதியாக அமர்ந்திருந்தனர்.
இரண்டு நாட்களாக அலைந்து திரிந்து, தெளிவான முகவரி இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்து இல்லத்திற்கும் சென்று, கதவைத் தட்டி ஆரோஹி ஆரோஹி என கேட்டு கேட்டு சலித்துப் போனது. அதில் பலர் கேள்வியாய், சந்தேகமாய் பார்க்க ஓடியே வந்துவிட்டனர்.
அதனால் தான் அத்தனைக்கும் சேர்த்து இப்பொழுது நிம்மதி பெருமூச்சு விட்டு, ஆழ்ந்து தேநீரில் கவனம் செலுத்தி வந்தனர். அப்படி தான் மகன் நினைத்திருந்தான்.
ஆனால் அன்னையின் மனதில் பல வினாக்கள் சந்தேகமாய் உருமாறி நின்றது. சரி வருமா சரி வருமா என்றெல்லாம் யோசித்து யோசித்து, தேநீர் முடிந்ததை கூட கவனிக்க மறந்து, வெறும் கோப்பையை உதட்டினை ஒட்டி உறிந்து கொண்டிருந்தார்.
"ஆன்ட்டி டீ?" திவ்யா, அவரது நினைவலைகள் ஊடே புகுந்து தேநீர் கோப்பையை நீட்ட, தெளிந்தவர் மறுக்காமல் அதையும் வாங்கிக் கொண்டார்.
"அக்கா டீ சூப்பர், எந்த டீத்தூள்?"
"சார் டீ போட்டது நான், அது என்ன பாராட்டு அங்க போகுது?" உரிமை குரல் தூக்கி மாறன் வந்து நிற்க, திவ்யாவுக்கு கணவனைப் பார்த்து சிரிப்பு வந்தது. அவர்களை வரவேற்ற சந்தோசம் இப்பொழுது இல்லை.
அது என்ன, காரணமே கூறாமல் மௌனமாய் உள்ளே வந்து அமர்ந்து, உரிமையாக தேநீரை அருந்திவிட்டு வார்த்தை மொழிய மறுக்கின்றனரே. ஏதோ ஆரோஹி என்னும் பெயரைக் கூறியதால் மட்டுமே இந்த அமைதி.
"அட விடுங்க ப்ரோ, நீங்களும் அக்காவும் என்ன வேற வேறயா?"
"ம்ம்... வந்ததுல இருந்து பாக்குறேன், வாயிலேயே வடை சுடுற, ஆனா வந்த காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டிங்கிறீங்க. என்ன, ஆரோஹி உங்கிட்ட எதுவும் வம்பு பண்ணாளா?" இதற்கு தான் வாய்ப்பு அதிகமென யோசித்து அந்த கேள்வியை வைத்தான்.
![](https://img.wattpad.com/cover/352506010-288-k28069.jpg)
YOU ARE READING
அலைபாயுதே (Completed)
Romanceஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான். ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்...