ரேவதி சரினு சொல்லிவிட்டாள்னு எல்லாருக்கும் மகிழ்ச்சி.
பத்து மணிக்கு எல்லாரும் அவரவர் ரூம்கு போனவுடன் கார்த்திக் ரேவதி ரூம்கு போறான்.
ரேவதி உன்கிட்ட கொஞ்சம் பேசனும் பேசலாமா.
பேசலாம் அண்ணா.
ரேவதி வாழ்கையில நீ அடுத்த கட்டம் போகனும்னு நினைக்கிறேன்.
எப்படியும் உனக்கு வீட்டில சங்கர் இல்லைனா வேற யாருக்காவது உன்னைய கல்யாணம் பன்னி வைக்கதான் போறாங்க.
அது ஏன் சங்கரா இருக்க கூடாது.
அண்ணா அது வந்து...
மது பிளீஸ் இந்த தடவ மட்டும் இடையில பேசாத நான் பேசி முடிக்கிறேன்.
சங்கரவிட நல்ல பையன் யாரும் உனக்கு கிடைக்கமாட்டான்.
வெற்றி மேல உனக்கு வந்தது காதலே இல்லை.
அவன் கட்டாய படுத்தி கைய கீறிக்கிருவேன், விஷயம் குடிச்சிடுவேன்னு சொல்லி வரவச்சி இருக்கான்.
அது லவ்னு நினைக்கிறியா ரேவதி.
கண்டிப்பா இல்லை ரேவதி அது லவ் இல்லை முதலில் ஏதாவது பன்னிவிடுவான்னு பயந்து பேசி இருக்காய்.ஒரு வேளை நீ லவ் பன்னி இருந்தால் அவன பத்தி தான் நினைத்து இருப்பாய்.
உன்கிட்ட மாற்றம் வந்து இருக்கும் நீ எப்பையும் போலவேதான் இருந்தாய்.
இனி யாரையாவது விரும்புனாதான் உனக்கு பிரியும்.
நல்லா யோசித்துபாரு ரேவதி மனசால யோசி உன்கிட்டயே நிறையா கேள்வி கேட்டுபார் புரியும்.
ரேவதி, சங்கர் பேசி முடிவு எடுத்தா நல்லா இருக்கும்னு கார்த்திக் நினைத்தான்.
அண்ணா எனக்கு மதுவோட அண்ணா நம்பர் வேண்டும்.
என் செல்போன்ல இருந்து எடுத்துக்கோமா.
ரேவதி நம்பர் தேடுகிறாள் கிடைக்கவில்லை.
அண்ணா நம்பரே இல்லை.
YOU ARE READING
என் இனியவளே 😍💕Completed💕😍
RomanceHi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...